எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 13 ஜனவரி, 2013


யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுபாஸ் ஹோட்டல்




யாழ்ப்பாணத்தின் விக்டோரியா வீதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சுபாஸ் ஹோட்டல், கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து 17 வருடங்களாக இயங்காது உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் இராணுவத்தினரால் பாவனைப்படுத்தப்பட்டு வந்தது.

இராணுவத்தினர் விடுதியினை பயன்படுத்தி வந்தமைக்கு இலங்கை அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வாடகை வழங்கப்பட்டிருந்தது. 2011ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் விடுதியினை உரிமையாளரிடம் மீளவும் கையளித்த நிலையில் சுபாஸ் ஹோட்டல் கடந்த டிசெம்பர் 14ஆம் திகதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுலா விடுதி தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது யாழ்ப்பாண சுற்றுலாத்துறைக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைகிறது. யாழ்ப்பாணத்தில் - இலங்கை உல்லாசப் பயணத்துறையினர் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முதல் சுற்றுலாவிடுதி என்ற பெருமையையும் சுபாஸ் ஹோட்டல் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்விடுதியில் குடும்ப அறைகள் உள்ளடங்கலாக 12 அறைகளும், சகல வசதிகளும் இருக்கின்றமை சிறப்பானதாகும்.

சிறந்த சமையல் கலைஞர்களால் அனைத்து வகையான உணவுகளும் உடன் தயாரித்துப் பரிமாறப்படுவதுடன் யாழில் உள்ள சுற்றுலாப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதற்கான போக்குவரத்தினையும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் விக்டோரியா வீதியில் அமைந்துள்ள சுபாஸ் ஹோட்டலுடன் 021 2224923 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.







"தைப் பொங்கல்" திருநாளும் யாழ்ப்பாணத் தமிழர் பண்பாடும் - பொங்கல் நிகழ்வுகள் விளக்கங்களுடன்

தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்துவைக்கும் தை மாதம் முதால் திகதி அன்று உலகமெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பெறும் ஒரு பெருவிழாவாகும். இத் திருநாளை தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றது.  
இவ் விழா சங்க காலத்தில்;  வேளாண்மைக்கு வேண்டிய மழைநீரையும், சூரிய ஒளியையும் (வெய்யிலையும்), காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் (பூமி, சூரியன், வழிமண்டலம் போன்றவற்றிற்கும்) தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்த கால்நடைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக உழவர்களால் கொண்டாடப்பெற்று வந்ததுள்ளதுடன்; தற்பொழுது உழவர்கள் மட்டும் மன்றி வேறு பல தொழில்புரியும் எல்லா தமிழ் மக்களும் (தம் மூதாதையினரான உழவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த) பண்டிகையாக கொண்டாடுகின்றார்கள். அதன் காரணமாக இப் பண்டிகை "உழவர் பண்டிகை" என்னும் பெயர் மழுங்கி ”தமிழர் பண்டிகை”யாக பொங்கியெழுந்துள்ளது.
பொங்கல் விழாவானது தற்காலத்தில் வீடுகளில் மட்டுமன்றி; ஆலயங்கள், கல்விக் கூடங்கள், தொழில் நிலையங்களிலும், சைவ சமயத்தவர்கள் அல்லாத தமிழ் மக்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பெற்று வருவதனால் தமிழர் பண்டிகையாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பெற்று சிறப்புப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. 
"தைப்பொங்கல் பண்டிகை"யை உழவர்கள் தாம் அறுவடைசெய்த “புதிரை” (நெற் கதிர்களை) அரிசியாக்கி அதில் பொங்கல் செய்து கொண்டாட, பல்வேறு தொழில் புரிவோர் உழவர்களிடம் புதிய அரிசியை வாங்கி பொங்கல் செய்து கொண்டாடுகின்றார்கள். இப் பண்டிகை இவ்வருடம் 14.01.2013 திங்கட்கிழமை அமைவதாக சோதிடம் கணிக்கின்றது. 
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் அதிகமாக வாழும் கனடாவில் உள்ள மிகப்பெரிய மார்க்கம் மாநகர சபை ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜனவரி 13ம், 14ம், 15ம் திகதிகளை தமிழர்களின் பாரம்பரிய நாட்களாகவும், தைப்பொங்கல் பண்டிகையை  பாரம்பரிய விழாவாகவும் அங்கீகரித்துள்ளதுடன் தை மாதத்தினை தமிழர்களின் புனித மாதமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் கனடாவில் ஒரு தமிழர் பண்டிகையையும் அதனோடு தொடர்புடைய மாதத்தினையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் வெளிநாட்டு மாநகர சபை என்ற பெருமையை மேற்படி மார்க்கம் நகர சபை பெற்றுள்ளது.
பொங்கல் என்பதற்கு ”பொங்கி வழிதல்”, ”பொங்குதல்” என்பது பொருள். அதாவது புதிய பானையில் பால் பொங்கி எழுந்து பொங்கி வழிந்து வருவதால், எதிர்காலம் முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கிச் சிறக்கும் என்பதும், களனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதும் இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

“உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் ஏனையோர் சோற்றில் கை வைக்க முடியும்” என்பது பலரும் அறிந்த பழமொழி. அதனால் போலும் உழவுத் தொழிலின் சிறப்பை கூற வந்த திருவள்ளுவர் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” எனவும், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என பாரதியாரும் கூறியுள்ளனர்.

மழை பொய்த்துவிட்டால் வேளாமையும் பொய்த்து விடும் என்பதனை கூறவந்த “திரைக்கவித் திலகம் மருதகாசி “ பூமியிலே மாரி (மழை) எல்லாம் சூரியனாலே, பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே” என்று கூறினார். சூரியனால் மழையும், பயிர் வளர்ச்சியும்; மழையினால் பயிர் வளர்ச்சியும், விளைச்சலும் உண்டாகின்றன என்பதனை உணர்ந்த எம் மூதாதயினர் மழைக்கு மூலகாரணியாக விளங்கும் சூரியனை அறுவடைக் காலத்தில் வணங்கி தாம் பெற்ற நெல்மணியில் பொங்கி விருந்து படைத்து நன்றிக் கடன் செலுத்துவது மரபாகி வந்துள்ளது.

இலங்கையில் ஒருவருடத்தில் மூன்று போகம் நெல் சாகுபடிசெய்யும் வளம் சில பகுதிகளில் காணப்படுகின்றன. அங்கே நீர்ப்பசன வசதிகளும் ஆறுகளும் அவற்றிற்கு சாதகமாக அமைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இருபோகம் விவசாயம் செய்யும் வசதிகள் இருந்துள்ளன, அதற்கு அங்கு காணப்பெறும் பெருங் குளங்களே காரணமாகும்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இங்கு ஆறுகளோ, பெரிய குளங்களோ இல்லாத காரணத்தால் வானம்பார்த்த பூமியாக மழைநீரை நம்பி ஒரு போகமே வேளாண்மை செய்யப் பெறுகின்றது. மழைவீழ்ச்சி கிடைக்கும் வருட இறுதிக் காலாண்டுப் பகுதியிலே இம்மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. மழை நீரை சிறிய குளங்கள், குட்டைகளில் சேமித்து வைத்து மழை குறைந்த காலத்தில் நீர்பாச்சுகின்றார்கள்.

புரட்டாதி மாதம் முடிவடைந்த பின்னர் மழைவீழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்தில் யாழ் விவசாயிகள் தங்கள் நிலங்களை பண்படுத்தி, உழுது, நெல் விதைப்பார்கள். அதன் பின் பருவத்தில் களையெடுத்து, பசளையிட்டு கண்ணும் கருத்துமாக பாராமரித்து வருவார்கள். இக் காலப்பகுதியில் பயிரிடம்பெறும் நெல் மார்கழி/தைமாதத்தில் விளைந்து அறுவடைக்கு தயாராகிவிடுகின்றது.

உழவர்கள் மார்கழி மாதத்தில் (தைப்பொங்கலுக்கு முன்) ஒரு நல்ல நாள் பார்த்து “புதிர் எடுத்தல்” நிகழ்வை நடத்துவார்கள். குடும்பத்தலைவர் குறிப்பிட்ட ஒரு நல்ல நாளில் காலையில் குளித்து கடவுளை வணங்கி வயலுக்குச் சென்று; வயல் வரம்பில் முதற்கடவுளான பிள்ளையாரை வைத்து பூ, பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை படைத்து தேங்காய் உடைத்து விநாயகரையும், குலதெய்வத்தையும் வணங்கி, அதன் பின்னர் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவை வெட்டி வீட்டுக்குக் கொண்டு செல்வார். இதேநேரம் குடும்பத்தலைவி தோய்ந்து, வீடு பெருக்கி, கழுவி, மெழுகி புதிர் வாங்குவதற்கு தயாராக இருப்பார்.

தலைவன் கொண்டு வருகின்ற நெற்கதிர்களை மனையாள் வாங்கி சாமியறைக்கு கொண்டு செல்லும் வழக்கம் உண்டு. அதன்பின்னர் கடவுளை வணங்கி புதிய நெற்கதிர்களை சாமியறை மற்றும் சமையல் அறைகளில் கட்டித் தொங்கவிடுவார்கள்.

மிகுதியாக உள்ள நெற்கதிர்களை அரிசியாக்கி தைப் பொங்கலுக்காக வைத்திருப்பார்கள். கடின உழைபின் மூலம் கிடைக்கப்பெற்ற நெற்கதிர்களை நல்ல நாளில் “புதிர்” எடுப்பதன் மூலம் வருடம் முழுவதும் அவர்களுக்கு சாப்பாட்டிற்கு குறைவிருக்காது என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும்.
பொங்கல் நிகழ்வுகள்:
யாழ்ப்பாணத்து மக்கள் தைப்பொங்கலுக்கு உரிய ஆயத்தங்களை முதல் நாளே தொடங்கிவிடுவதோடு முதல் நாள் நடைபெறும் சந்தை முக்கியமான ஒரு சந்தையாக கருதப்படும். இதைப் "பொங்கல் சந்தை" என சிறப்பாக அழைப்பார்கள். பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் தங்களிடம் அதிகமாக இருந்தால். அதை சந்தைக்கு கொண்டு சென்று விற்றுவிட்டு தமக்குத் தேவையான பொங்கல் பொருட்களை வாங்கி வருவார்கள்.

புதுப்பானை, புதுஅரிசி, சர்க்கரை, பயறு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி, கற்பூரம், கரும்பு, இஞ்சி இலை, மஞ்சள் இலை போன்ற பொருட்கள் யாழ் மக்களுடைய பொங்கலில் முக்கிய இடத்தைப்பிடிக்கிறன. இப்பொருட்கள் அனைத்தையும் முதல் நாளே வாங்கி பொங்கலை ஆவலோடு வரவேற்பார்கள்.

தைப்பொங்கல் தினத்தன்று ஒவ்வொரு குடிமகனும் தம்வீட்டுப் பொங்கல் படையல் சூரியன் உதிக்கும் போதே முதல் விருந்தாக அமைய வேண்டும் என்ற ஆதங்கத்தில் அதிகாலையே விழித்தெழுந்து பொங்கலுக்கான ஆயத்தங்களைச் செய்வார்கள்.  எல்லோரும் அதிகாலையில் தோய்ந்து (முழுகி), வீடு பெருக்கி, கழுவி, முற்றம் கூட்டி, வாசலில் சாணம் கொண்டு மெழுகி அதில் உலக்கை வைத்து அரிசி மா, மஞ்சள் மாவினால் அல்லது செங்கட்டி மண்ணால் கோலம் போடுவார்கள். முற்றம்  சீமந்தினால் ஆனதாயின் அதனை சுத்தம் செய்து கழுவி கோலம் போடுவார்கள். அத்துடன் வீட்டு வாசலில் (கதவு நிலையில்) மாவிலை கட்டி சூரிய பகவானை வரவேற்க தயாராக இருப்பார்கள்.
புதுமனை, புதுமணமக்கள் இருப்பவர்கள் பொங்கல் விழாவை ”தலைப் பொங்கல்” என வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு வெள்ளையடித்து, வீட்டை அலங்கரித்து, தாமும் புத்தாடை அணிந்து சூரிய பகவானின் ஆசியைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். துக்கமான நிகழ்வுகள் நிகழ்வுற்ற குடும்பத்தினர் பொங்கல் விழாவை ஒரு வருடத்திற்கு தவிர்த்துக் கொள்வார்கள்.

யாழ்ப்பாணதில் அமைந்துள்ள வீடுகளில் பெரும்பான்மையானவை வடக்கு வாசல் அல்லது கிழக்கு வாசல் வீடுகளாக  இருப்பதனால் வீட்டு முற்றத்தில் காலையில் சூரிய ஒளி விழக்கூடியதாக அமைந்திருப்பதனால் சூரிய ஒளி பற்றி சிந்திக்க தேவை ஏற்படுவதில்லை. ஆனால் வீடு மேற்கு அல்லது தெற்கு வாயிலாக அமைந்திருக்குமாயின் சூரிய ஒளி படும் படியான இடமாக தேர்ந்தெடுத்தல் அவசியமாகின்றது.  (வெளிநாடுகளில் வசிப்பவர்கள் காலநிலை, சுவாத்தியம், சட்டங்களுக்கு ஏற்ப பொங்க வேண்டி இருப்பதனால் வசதிகளை கருத்திற் கொண்டு வீட்டு குசினியை சுத்தம் செய்து பொங்கல் பொங்கி சூரியஒளி படும் இடத்தில் படைத்து வழிபடுகின்றார்கள்)
நாற்சதுரமாக நாற்புறமும் வாசல் வைத்து கோலம் போட்டு குறிக்கப்பட்ட இடத்தை புனித இடமாக மதிப்பார்கள். கோலம் போடப்பெற்ற இடத்தினை நான்கு கம்புகள் நட்டு அதில் நூல்ன் கட்டி  தோரணம், மாவிலை தொங்க விடுவார்கள். கோலமிட்டு புனிதமாக்கிய இடத்தின் நடுவில் புதிதாக மண்ணினால் பிடித்து வைத்த மூன்று அடுப்புகட்டிகளையும் வைத்து பொங்கல் பானை வைப்பதற்கு அடுப்பை தயார்படுத்துவார்கள். சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கு முன் வீட்டின் சுவாமி அறையில் தீபம் ஏற்றி வணங்கியபின் சூரிய பொங்கலை ஆரம்பிப்பார்கள்.
குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தோத்திரங்கள் பாடி நிற்க சாணத்தினால் பிள்ளையார் பிடித்து வைத்து (பிள்ளையார் சிலையும் வைக்கலாம்), நிறைகுடம் வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து வைத்து தூபம், தீபம் காட்டி  விநாயகரை வழிபெற்றபின், அடுப்பில் நெருப்பு மூட்டி, புதுப்பானையின் கழுத்தில் மாவிலை, இஞ்சி இலை, மஞ்சள் இலைகளைக் கட்டி(காப்புக் கட்டி), விபூதிக் குறிகள் வைத்து, திலகமிட்டு புனிதமாக்கி அதனுள் நீரும் பசுப்பாலும் விட்டு அடுப்பில் பொங்க வைப்பார்கள். பால் பொங்கி எழுந்து வழியும் வரை நெருப்பை கூட எரிய விடுவார்கள். பால் பொங்கி வழியும்போது கடவுளை வணங்கி  புது அரிசியை வீட்டுத் தலைவர் அல்லது ஆண்மகன் இரு கைகளினாலும் அரிசியை கிள்ளி மூன்று முறை (வலஞ்சுளியாக) சுற்றி பானையில் இட்டு மகிழ்ச்சியுடன் பொங்கலிடுவார்கள். அப்போது சக்கரைப் பொங்கலாயின் பயிற்றம் பருப்பு, சக்கரை, கஜு, ஏலக்காய் முதலியவற்றை போட்டு பொங்கல் செய்வார்கள். பொதுவாக தைப் பொங்கலின்போது சக்கரைப் பொங்கலே பொங்குவது வழக்கம் ஆனால் சிலர் வெண்புக்கையும் சாம்பாரும் (கறியும்) வைப்பார்கள். சிறுவர்கள் பட்டாஸ் கொழுத்தி, மகிழ்ச்சியோடு ஆடிப்பாடுவர்.
பால் பொங்கி அரிசி போட்டபின் பானையில் இருக்கும் மிதமிஞ்சிய நீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து அதனை பூஜைகள் முடியும் வரை வைத்திருந்து அதனை மாவிலை கொண்டு வீடின் எல்லாப் பகுதிகளுக்கும் படும் படியாக தெளிப்பார்கள். அந் நீரில் சூரியனின் சக்தி இருப்பதால் சூரிய பகவானின் சக்தி எல்லா இடங்களிலும் பட்டு பிரகாசிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

பொங்கிய பொங்கலை ஒரு தலை வாழையிலையில் படைத்து அதன் மேல் பகுதியை குழிவாக்கி அதன் மேல் வாழைப்பழத்தை உரித்து வைத்து அதன் மீது தயிர் விட்டு, சக்கரையும் வைப்பார்கள். பலகாரங்களை (வடை,மோதகம், முறுக்கு) என்பனவற்றை இன்னொரு தலைவாழையிலும், சுத்தம் செய்யப் பெற்ற பழங்களை வேறு ஒரு தலை வாழையிலையிலும் படைப்பார்கள். படையல் படைக்கும் போது (சூரியனுக்கு வலப் பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்குபடி படைத்தல் வேண்டும்.  வாழை இலைகளில் படைத்த பின், தேங்காய் உடைத்து வைத்து சூரிய பகவானுக்கு
 தூப, தீபம் ஆராத்தி எடுத்து அனைவரும் பக்தியோடு பஜனை பாடி சூரியனை வணங்குவார்கள். படையல்சூரியனுக்கு படைத்த பொங்கலை அனைவரும் சேர்ந்து உண்டு மகிழ்ந்து பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

உறவினர்கள், நண்பர்கள் துக்க நிகழ்வுகள் (ஆசூசம்) அல்லது வேறு சமூகத்தவர் என்னும் காரணமாக பொங்காது இருந்தால் அவர்களுக்கும் தமது பொங்கலை பரிமாறி அவர்களையும் மகிழ்விப்பார்கள்.

பொங்கல் பண்டிகை நாளில் ஊரில் பல பாகங்களிலும் தமிழன் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் முத்தமிழ் (இயல், இசை, நாடக) கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். அவற்றிலும் மக்கள் பங்கேற்று மகிழ்ச்சி பொங்குவர்.

பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் “பட்டிப்/மாட்டுப் பொங்கல்” தினமாக கொண்டாடும் வழக்கமும் அவர்களிடம் உண்டு. உழவனின் நண்பனாக இருந்து உழைத்த (மாடாக உழைத்த) மாடுகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக பட்டிப் பொங்கல் கொண்டாடும் மரபு காணப்படுகிறது. அன்றைய தினம் மாடுகளைக் குளிப்பாட்டி, விபூதி குறிகள் வைத்து, சந்தணம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர் சாத்தி அல்லது மலர் மாலை சாத்தி, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுத்தொழுவத்தில் பொங்கல் பொங்கி மாட்டை கடவுளாக மதித்து அதற்கு படையல் படைத்து உண்ணக் கொடுத்து, தாமும் உண்டு மகிழ்வர்.

வீட்டு சாமியறையிலும் சமையலறையிலும் கட்டப்பட்ட “புதிர்” நெல் அடுத்த வருடம் புதிர் எடுக்கும் வரை அப்படியே இருக்கும். பொதுவாக பொங்கல் தினம் முடிவடைந்த பின்னர் வசதியான ஒரு நாளில் “அருவி வெட்டு” இடம்பெறும். அல்லது பொங்கலுக்கு முன்பாகவே அரிவி வெட்டு நிகழ்ந்திருக்கும். பொதுவாக  விதை நெல்லின் வர்க்கத்தைப் பொறுத்தே அதன் விளைவு காலம் இருக்கும். பொதுவாக சில நெல் 3, 4, 5-6 மாதங்களில் பூரண விளைவை அடைந்து விடும். ”மொட்டைக் கறுப்பன்” நெல்லின் விளைவு காலம் 5-6 மாதங்களாகும். இதன் விளைவும், ருசியும் பிரமாதம். பொதுவாக மொட்டைக் கறுப்பன் நெல் ஆடி மாதத்தில் விதைத்து மார்கழி தை மாதங்களில் அறுவடை செய்வார்கள். காலத்தையும், தேவையான தண்ணீரின் அழவைப் பொறுத்து பள்ளக் காணிகளில் மாத்திரம் பயிர் செய்யப் பெறுகின்றது.

பாடுபட்டு உழைத்த உழைப்பின் மூலம் கிடைத்த நெற்கதிர்களை அறுத்து காயவைத்து “சூடடிப்பார்கள்”. சூடடிப்பிற்கு முற்காலத்தில் மாடுகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் தற்காலத்தில் ட்ரக்ரர்களின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. எந்த முறை மூலம் என்றாலும் சூடடித்த நெற்தானியங்களை வீட்டுக்கு கொண்டு சென்று சாமியறைகளில் வைக்கும் வழக்கம் இன்றும் அங்கு காணப்படுகிறது.

நெல் தானியம் என்பது செல்வங்களுள் முக்கியமான ஒன்றாக அவர்களால் கருதப்படுகிறது. எனவே இறைவன் இருக்கும் இடத்தில்தான் செல்வம் இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய கருத்தாகும். அதனால் சாமியறையில் “கோர்க்காலி”என்னும் உயர்ந்த மேடையில், தங்கள் உழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற செல்வங்கள் அனைத்தையும் மூட்டைகளாக கட்டி வைக்கிறார்கள்.

சூடு அடிக்கப்பெற்றபின் எஞ்சியிருக்கும் வைக்கோலைக் காயவைத்து, கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடான நேரம் கொடுப்பதற்காக குவியலாக (பட்டடையாக) குவித்து வைப்பார்கள். பதிர்களை (சப்பட்டை) எடுத்து அவற்றை இளம் பசுக்கன்றின் சாணத்துடன் சேர்த்துக் குழைத்து அதனைக் காயவைத்து விபூதி செய்வதற்காக பாவிக்கின்றார்கள்.

அறுவடை மூலம் கிடைக்கும் நெல்லில், தமக்கு உதவி புரிந்த தொழிலாளர்களுக்கும் பகிந்து கொடுத்தபின், தமக்குத் தேவையானவற்றை சேமித்து வைக்கிறார்கள். மிகுதியானவற்றை விற்று விடுவார்கள். அவர்களின் உழைப்பின் மூலம் கிடைக்கின்ற செல்வம் தை மாதத்தில் கிடைக்கப் பெறுவதனால் போலும் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி தோற்றம் பெற்றிருக்கிறது. தை மாதத்தில் அவர்களிடம் பணப்புழக்கம் அதிகமாக காணப்படும்.

இதன் காரணமாக திருமணங்கள் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை அதிகமாக தை மாதத்தில் தமிழர்கள் நடாத்துவார்கள். இந்தப் பழமொழியின் தாக்கம் யாழ்ப்பாணத்து மக்களிடையே இன்றும் காணலாம்.

தைத்திருநாள். உலகம் வாழ் தமிழர்கள் அனைவரும் இன்று தைப்பொங்கல் திருநாளை வெகு குதூகலமாகக் கொண்டாடுகின்றனர். இச்சமயத்தில் எமது இணயத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதலாந் திகதியை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை 'மகர சங்கராந்தி தேவதை' என்று அழைப்பார்கள். இவ்விதம் 60 வருடங்களுக்கு தனித்தனி பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை- தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள்.

இத்தகைய புண்ணிய தினமான சங்கராந்தியன்று சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்திர அயனம் என்று பெயர். இத்தினத்தில் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.

இன்றைய தினம் சூரிய வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும். எனவேதான் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே கிடையாது. வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. "நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே"என்று வேதம் கூறுகிறது.

மேலும், சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை "ஓம் ய ஏஷோந் தராதித்யே ஹிரண்மய புருஷ" எனப் புகழ்கிறது.

ஞாயிறு, 25 நவம்பர், 2012


உலகின் மிகப்பெரிய உள்ளக கடற்கரை


உலகின் மிகப்பெரிய உள்ளக கடற்கரை, ஜேர்மனிய கிராமமொன்றின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரையில், சுமார் 6 ஆயிரம் மக்கள் ஒரே தடவையில் சூரிய ஒளியை அனுபவிக்க முடியும்.

கிறவுன்ஸ்னிக் பகுதியில் அமைந்துள்ள வெப்ப வலயத் தீவின் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இதில்  சுமார் 50 ஆயிரம் மரங்களைக் கொண்ட காடும் உள்ளது.

பெரிய பலூனொன்றில் பறக்கக்கூடிய வகையிலான பறந்தளவு நிலப்பரப்பில் இந்த கடற்கரைச் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் மிகப்பெரிய நீச்சல் தடாகமும் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய விமானக் கூடாரம் ஒன்றே பின்நாட்களில் கடற்கரை சுற்றுலா மையமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  





சனி, 24 நவம்பர், 2012


Nallur Kandaswamy Temple festival day 03 pm

Latest Videos


Map



15 வருட இடைவெளிக்கு பின்பு மீண்டும் இசை ஆல்பம் தயாரிக்கும் ரஹ்மான். 


News Service
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1997ம் ஆண்டு 'மா துஜே சலாம்' என்ற இசை ஆல்பம் தயாரித்தார்.இதில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றது. இது ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தை பெற்றுத் தந்தது.தற்போது புதிய இசை ஆல்பம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், மா துஜே சலாம் இசை ஆல்பம் தயாரித்து 15 வருடம் ஆகிவிட்டது. இது என்னுடைய முதல் தனி ஆல்பம்.இன்னொரு முறை அதுபோல் ஒரு ஆல்பம் என்னால் தயாரிக்க முடியாது. என்னுடைய இடைவிடாத பணிக்கு மத்தியில் மற்றொரு ஆல்பம் தயாரிப்பது சவாலானது.
  
ஆனாலும் தற்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது என்றார்.மா துஜே சலாம் ஆல்பம் இந்திய சுதந்திர தினத்தின் கோல்டன் ஜூப்ளியன்று வெளியிடப்பட்டது. தேசபக்தியை வலியுறுத்தும் ஆல்பமாக அது அமைந்தது.வந்தே மாதரம்தான் இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத இசை ஆல்பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிக்கு வசூலை அள்ளிகொடுக்கும் கேரளா - வசூல் தொகை 15 கோடி 


News Service
விஜய் நடித்த துப்பாக்கி தமிழ்நாட்டில் நவம்பர் 13 தீபாவளி அன்று வெளியானது. தீபாவளியை அதிகம் கொண்டாடாத கேரளாவில் 126 தியேட்டர்களில் துப்பாக்கி வெளியானது. தீபாவளி அன்று அதிகாலையில் தமிழர்கள் எண்ணை தேய்த்து குளித்துக் கொண்டிருக்கும்போது பெரும்பாலான மலையாளிகள் துப்பாக்கி படத்தை பார்த்து விட்டார்கள். கேரளாவில் முக்கிய நகரங்களில் தீபாளியன்று அதிகாலை 4 மணிக்கும், 5 மணிக்கும் துப்பாக்கி படம் திரையிடப்பட்டது. ஆக தமிழர்களை விட துப்பாக்கியை முதலில் பார்த்து ரசித்தது மலையாளிகள்தான்.
  
விஷயம் அதுவல்ல, துப்பாக்கி வெளியான முதல் இரண்டு நாட்களில் நடந்த 600 காட்சிகளில் விநியோகஸ்தர்களுக்கு துப்பாக்கி அள்ளிக் கொடுத்தது 2 கோடி ரூபாய். பத்து நாட்களுக்கு பிறகு வந்து தொகை 6 கோடி ரூபாய். இன்னும் 50 நாட்கள் வரை அனைத்து தியேட்டர்களிலும் ஓடும் என்கிறார்கள்.
அப்படியென்றால் துப்பாக்கி கேரளாவில் வசூலிக்கப்போகும் தொகை குறைந்த பட்சம் 15 கோடி என்கிறார்கள்.இதற்கு முந்தைய தமிழ்பட வசூல் சாதனையை துப்பாக்கி முறியடிக்கும் என்கிறார்கள்.
மம்முக்காவும், மாலேட்டனும் துப்பாக்கிய பார்த்துட்டாங்களா...

அமிர்தம் போன்ற தேனை தரும் தேனீக்கள் பற்றிய சுவாரசியமான தகவல்

News Service
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
  
இவற்றால் உற்பத்தி செய்யப்படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.
தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை
தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.
1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ஆண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)
ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.
இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.
இராணித் தேனீ
இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது.
அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.
இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது.
ஆண் தேனீக்கள் (Drone)
ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.
நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.
வேலைக்காரத் தேனீக்கள்
மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.
தேனின் மருத்துவக் குணங்கள்
பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது
உடல் பருமனாக குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம்
உடல் பருமனைக் குறைக்க மிதமான வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை குறைக்கலாம்.
வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளிஇ இருமல் போன்றவை நீங்கும்.
தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.

ரிச்சா  படங்கள்
 













  

 


 தமன்னா - புத்தம் புதிய படங்கள் 2012-11-13 17:14:33

விஜய் மற்றும் இயக்குனர் விஜய் இணையும் படத்தின் பூஜை
நவ.28ஆம் திகதி முதல் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ள விஜய் மற்றும் இயக்குனர் விஜய் இணைவுள்ள பெயரிடப்படாத புதிய படத்தின் பூஜையின் போது படமாக்கப்பட்டவை.


ஞாயிறு, 7 அக்டோபர், 2012


களுத்துறை 'த சான்ட்ஸ்' ஹோட்டல்



உழைத்து களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு முக்கியமானதாகும். அந்த ஓய்வு எங்கு கிடைக்கும் என ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அமைதியாகவும் அழகாகவும் உள்ள இடங்களையே நாடுவர். அப்படியான ஒர் இடத்திலேயே 'த சான்ட்ஸ்' ஹோட்டல் அமைந்துள்ளது. விடுமுறையை கழிக்க வருபவர்களுக்கு ஒரு நவீன வடிவமைப்பில் மகிழ்ச்சிகரமாக பிரமிப்பூட்டும் அனுபவத்தை இந்த ஹோட்டல் அறிமுகம் செய்கின்றது.

களுத்துறை ரமடா ரிசோட் என பிரபல்யம் பெற்ற இந்த ஹோட்டல் நான்கு நட்சத்திர அந்தஸ்தினை பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே 'த சான்ட்ஸ்' என பெயர் மாற்றப்பட்ட இந்த ஹோட்டலை இலங்கையின் முன்னணி ஹோட்டல் கம்பனியான எயிற்கென் ஸ்பேன்ஸ் ஹோட்டல்ஸ் நிறுவத்தினால் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து சுமார் 37 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள களுத்துறை நகரத்திற்கு அண்மையிலுள்ள வஸ்கடுவ எனும் பிரதேசத்திலேயே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. காலி வீதியிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கடற்கரைக்கு அருகில் சுமார் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைய பெற்றுள்ளது.

சுமார் 15 நிமிடங்களில் களுத்துறை நகரை அடைய கூடிய இடத்திலுள்ள த சான்ட்ஸிற்கு அருகாமையில் விகாரை, தேவாலயம், பள்ளிவாசல், பொது சந்தை மற்றும் பஸ் தரிப்பு நிலையம் ஆகியன காணப்படுகின்றன.   இந்த ஹோட்டலிலுள்ள ஊழியர்கள் ஆங்கிலம், சிங்களம் மற்றும் ஜேர்மனி ஆகிய மொழிகளில் சரளமாக உரையாற்றுபவர்களாக காணப்படுகின்றனர்.

அத்துடன் நவீன ரக தங்கும் அறைகள், ஓய்வெடுக்கும் அறை, 24 மணி நேர அறை சேவை, வை-பை சேவை, வாகனங்கள் தரிப்பிடம், சோனா, ஸ்டிம் பாத்,  லைவ் மியூசிக், நகை கடை, நீச்சல் தடாகம், சிறுவர் நீச்சல் தடாகம், சிறுவர் உணவுகள்,  உடற் பயிற்சி நிலையம் மற்றும் கடல் குளியல் உள்ளிட்ட பல வசதிகள் விருந்தினர்களுக்கு தேவையான வகையில் இந்த ஹோட்டலில் உள்ளன.

இதேவேளை, சுமார் 109 அறைகளை கொண்ட இந்த ஹோட்டலில் ஸ்டேன்டட், கபானாஸ், குடும்ப அறை, டியூலக்ஸ் மற்றும் லக்ஸரி சூட் ஆகிய வகையான விடுதி அறைகள் உள்ளன.

இதில் தனி ஒருவர், இருவர், மூவர் என தங்க கூடிய வகையில் அமைய பெற்ற 61 ஸ்டேன்ரட் அறைகளை கொண்டுள்ளது. இருவர் மாத்திரம் தங்கக்கூடிய வகையில் கபானாஸ் எனும் 30 அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த கபானாஸ் எனப்படும் அறைகள் புதிய தம்பதியினரின் தேன் நிலவினை கழிப்பதற்கு ஏற்ற வகையிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதற்கு மேலதிகமாக நான்கு பேர் தங்கக்கூடிய மூன்று அறைகள் உள்ளன. இரண்டு பேர் தங்கக்கூடிய வகையிலான டியூலக்ஸ் எனும் 14 அறைகள் உள்ளன.  அத்துடன் மூன்று பேர் தங்கக்கூடிய லக்ஸரி சூட் எனும் ஓர் அறை உள்ளது. ஹோட்டலிலுள்ள ஏனைய அறைகளை விட நவீன முறையில் பல முக்கிய வசதிகளுடன் லக்ஸரி சூட் அறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வானொலி, எல்.சீ.டி. தொலைக்காட்சி, பாதுகாப்பு பெட்டி, ஒரு நாளைக்கு இரண்டு நேர துப்புரவாக்கல் சேவை, சோபா மெத்தை, வேண்டுகோள் விடுத்தால் தினசரி பத்திரிகை உள்ளிட்ட பல வசதிகளை அறைகளில் தங்கும் விருந்தினர்களுக்கு ஏற்ற வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றிற்கு மேலதிகமாக டென்னிஸ், பட்மின்டன், மேசைப்பந்து, வலைப்பந்து, கரம், ஜிம் ஆகிய விளையாட்டு வசதிகளும் இந்த ஹோட்டலில் உள்ளன. அத்துடன் கடலை அண்டிய பிரதேசத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கின்றமையினால் கடல் சார்ந்த பெயர்களான த யாட், வேவ்ஸ், ஷெல்ஸ், கோறல்ஸ், ஹோரல்ஸ் மற்றும் சாண்ட்ஸ் ஆகிய பெயர்களில் உணவு விடுதிகள் அமையப்பெற்றுள்ளன.

விருந்தினருக்கு தேவையான அனைத்து வகையான உணவுகளையும் 24 மணித்தியாலங்களும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஹோட்டலில் பிரதான மூன்று உணவகங்கள் மூன்று திசைகளில் காணப்படுகின்றன. இதன் காரணமாக விருந்தினர்கள் விரும்புகின்ற உணவுகளை விரும்பிய இடத்தில் தெரிவு செய்ய முடியும்.

சுமார் 350 பேர் இருக்கும் அளவிற்கு திருமண உள்ளிட்ட பொது நிகழ்வுகளை நடத்துவதற்காக பன்குயிற்றும் உள்ளது. அத்துடன் ஒரு சமயத்தில் இரண்டு திருமண நிகழ்வுகளையும் நடத்த கூடிய வகையிலான வசதிகளையும் இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.

அத்துடன் கூமார் 20 பேர் கலந்துகொள்ள கூடிய வகையிலான சிறிய மாநாட்டு மண்டபமும் உள்ளது. விருத்தினர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் இந்த அறையில் மாற்றியமைக்கப்படும். அத்துடன், விருந்தினர்களிற்கு ஏற்ற வகையில் விசேட வகையான நாட் பொதிகளையும் 'த சான்ட்ஸ்' ஹோட்டல் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது காலை உணவுடன் நீச்சல் தடாக வசதி, இரவு நேர தங்குமிடத்துடன் காலை உணவு மற்றும் நீச்சல் தடாக வசதி, புஃல் போர்ட் எனப்படும் காலை மதியம், இரவு ஆகிய நேர உணவுகளுடன் நீச்சல் தடாக வசதி மற்றும் காஃப் போர்ட் எனப்படும் பகல் மற்றும் இரவு உணவுகளுடன் நீச்சல் தடாக வசதி உள்ளிட்ட பல பொதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அனைத்து வகையான பொதிகளும் விருந்தினரின் வசதிக்கு ஏற்ற வகையில் மிக குறைந்த கட்டணத்திலான ஒருநாள் பொதிகளாகும். பொது முகாமையாளரான நிரான் ரத்வத்தையினை தலைமையிலான த சான்ட்ஸ் ஹோட்டலிலுள்ள ஊழியர்கள் - விருத்தினர்களை மிக்க சிறந்த முறையில் வரவேற்கின்றனர்.

வருட இறுதி பருவகாலம் ஆரம்பிக்கும் இத்தருணத்தில் இப்பொழுதே இவ்விடத்தினை நீங்கள் தெரிவுசெய்து கொண்டால் வருட இறுதியினை மகிழ்ச்சியாக கழிக்க முடியும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 0094 0342228484 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் gm.thesands@aitkenspenceஎன்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.