எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 25 நவம்பர், 2012


உலகின் மிகப்பெரிய உள்ளக கடற்கரை


உலகின் மிகப்பெரிய உள்ளக கடற்கரை, ஜேர்மனிய கிராமமொன்றின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரையில், சுமார் 6 ஆயிரம் மக்கள் ஒரே தடவையில் சூரிய ஒளியை அனுபவிக்க முடியும்.

கிறவுன்ஸ்னிக் பகுதியில் அமைந்துள்ள வெப்ப வலயத் தீவின் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இதில்  சுமார் 50 ஆயிரம் மரங்களைக் கொண்ட காடும் உள்ளது.

பெரிய பலூனொன்றில் பறக்கக்கூடிய வகையிலான பறந்தளவு நிலப்பரப்பில் இந்த கடற்கரைச் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் மிகப்பெரிய நீச்சல் தடாகமும் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய விமானக் கூடாரம் ஒன்றே பின்நாட்களில் கடற்கரை சுற்றுலா மையமாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  





சனி, 24 நவம்பர், 2012


Nallur Kandaswamy Temple festival day 03 pm

Latest Videos


Map



15 வருட இடைவெளிக்கு பின்பு மீண்டும் இசை ஆல்பம் தயாரிக்கும் ரஹ்மான். 


News Service
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1997ம் ஆண்டு 'மா துஜே சலாம்' என்ற இசை ஆல்பம் தயாரித்தார்.இதில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றது. இது ரசிகர்கள் மனதில் அவருக்கு தனி இடத்தை பெற்றுத் தந்தது.தற்போது புதிய இசை ஆல்பம் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், மா துஜே சலாம் இசை ஆல்பம் தயாரித்து 15 வருடம் ஆகிவிட்டது. இது என்னுடைய முதல் தனி ஆல்பம்.இன்னொரு முறை அதுபோல் ஒரு ஆல்பம் என்னால் தயாரிக்க முடியாது. என்னுடைய இடைவிடாத பணிக்கு மத்தியில் மற்றொரு ஆல்பம் தயாரிப்பது சவாலானது.
  
ஆனாலும் தற்போது அதற்கான நேரம் வந்திருக்கிறது என்றார்.மா துஜே சலாம் ஆல்பம் இந்திய சுதந்திர தினத்தின் கோல்டன் ஜூப்ளியன்று வெளியிடப்பட்டது. தேசபக்தியை வலியுறுத்தும் ஆல்பமாக அது அமைந்தது.வந்தே மாதரம்தான் இதுவரை இந்தியாவில் வெளியான சினிமா அல்லாத இசை ஆல்பத்தில் அதிக விற்பனை ஆனது என்று இசை உலகில் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிக்கு வசூலை அள்ளிகொடுக்கும் கேரளா - வசூல் தொகை 15 கோடி 


News Service
விஜய் நடித்த துப்பாக்கி தமிழ்நாட்டில் நவம்பர் 13 தீபாவளி அன்று வெளியானது. தீபாவளியை அதிகம் கொண்டாடாத கேரளாவில் 126 தியேட்டர்களில் துப்பாக்கி வெளியானது. தீபாவளி அன்று அதிகாலையில் தமிழர்கள் எண்ணை தேய்த்து குளித்துக் கொண்டிருக்கும்போது பெரும்பாலான மலையாளிகள் துப்பாக்கி படத்தை பார்த்து விட்டார்கள். கேரளாவில் முக்கிய நகரங்களில் தீபாளியன்று அதிகாலை 4 மணிக்கும், 5 மணிக்கும் துப்பாக்கி படம் திரையிடப்பட்டது. ஆக தமிழர்களை விட துப்பாக்கியை முதலில் பார்த்து ரசித்தது மலையாளிகள்தான்.
  
விஷயம் அதுவல்ல, துப்பாக்கி வெளியான முதல் இரண்டு நாட்களில் நடந்த 600 காட்சிகளில் விநியோகஸ்தர்களுக்கு துப்பாக்கி அள்ளிக் கொடுத்தது 2 கோடி ரூபாய். பத்து நாட்களுக்கு பிறகு வந்து தொகை 6 கோடி ரூபாய். இன்னும் 50 நாட்கள் வரை அனைத்து தியேட்டர்களிலும் ஓடும் என்கிறார்கள்.
அப்படியென்றால் துப்பாக்கி கேரளாவில் வசூலிக்கப்போகும் தொகை குறைந்த பட்சம் 15 கோடி என்கிறார்கள்.இதற்கு முந்தைய தமிழ்பட வசூல் சாதனையை துப்பாக்கி முறியடிக்கும் என்கிறார்கள்.
மம்முக்காவும், மாலேட்டனும் துப்பாக்கிய பார்த்துட்டாங்களா...

அமிர்தம் போன்ற தேனை தரும் தேனீக்கள் பற்றிய சுவாரசியமான தகவல்

News Service
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
  
இவற்றால் உற்பத்தி செய்யப்படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.
தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை
தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.
1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ஆண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)
ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.
இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.
இராணித் தேனீ
இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது.
அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.
இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது.
ஆண் தேனீக்கள் (Drone)
ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.
நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.
வேலைக்காரத் தேனீக்கள்
மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.
தேனின் மருத்துவக் குணங்கள்
பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது
உடல் பருமனாக குளிர்ந்த நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை கூட்டலாம்
உடல் பருமனைக் குறைக்க மிதமான வெந்நீரில் தேனை கலக்கி குடித்துவர உடல் எடையை குறைக்கலாம்.
வெற்றிலைச்சாற்றுடன் தேனை கலக்கி குடிக்க சளிஇ இருமல் போன்றவை நீங்கும்.
தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.

ரிச்சா  படங்கள்
 













  

 


 தமன்னா - புத்தம் புதிய படங்கள் 2012-11-13 17:14:33

விஜய் மற்றும் இயக்குனர் விஜய் இணையும் படத்தின் பூஜை
நவ.28ஆம் திகதி முதல் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ள விஜய் மற்றும் இயக்குனர் விஜய் இணைவுள்ள பெயரிடப்படாத புதிய படத்தின் பூஜையின் போது படமாக்கப்பட்டவை.


ஞாயிறு, 7 அக்டோபர், 2012


களுத்துறை 'த சான்ட்ஸ்' ஹோட்டல்



உழைத்து களைத்த உள்ளங்களுக்கு ஓய்வு முக்கியமானதாகும். அந்த ஓய்வு எங்கு கிடைக்கும் என ஏங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அமைதியாகவும் அழகாகவும் உள்ள இடங்களையே நாடுவர். அப்படியான ஒர் இடத்திலேயே 'த சான்ட்ஸ்' ஹோட்டல் அமைந்துள்ளது. விடுமுறையை கழிக்க வருபவர்களுக்கு ஒரு நவீன வடிவமைப்பில் மகிழ்ச்சிகரமாக பிரமிப்பூட்டும் அனுபவத்தை இந்த ஹோட்டல் அறிமுகம் செய்கின்றது.

களுத்துறை ரமடா ரிசோட் என பிரபல்யம் பெற்ற இந்த ஹோட்டல் நான்கு நட்சத்திர அந்தஸ்தினை பெற்றுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே 'த சான்ட்ஸ்' என பெயர் மாற்றப்பட்ட இந்த ஹோட்டலை இலங்கையின் முன்னணி ஹோட்டல் கம்பனியான எயிற்கென் ஸ்பேன்ஸ் ஹோட்டல்ஸ் நிறுவத்தினால் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து சுமார் 37 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள களுத்துறை நகரத்திற்கு அண்மையிலுள்ள வஸ்கடுவ எனும் பிரதேசத்திலேயே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. காலி வீதியிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கடற்கரைக்கு அருகில் சுமார் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைய பெற்றுள்ளது.

சுமார் 15 நிமிடங்களில் களுத்துறை நகரை அடைய கூடிய இடத்திலுள்ள த சான்ட்ஸிற்கு அருகாமையில் விகாரை, தேவாலயம், பள்ளிவாசல், பொது சந்தை மற்றும் பஸ் தரிப்பு நிலையம் ஆகியன காணப்படுகின்றன.   இந்த ஹோட்டலிலுள்ள ஊழியர்கள் ஆங்கிலம், சிங்களம் மற்றும் ஜேர்மனி ஆகிய மொழிகளில் சரளமாக உரையாற்றுபவர்களாக காணப்படுகின்றனர்.

அத்துடன் நவீன ரக தங்கும் அறைகள், ஓய்வெடுக்கும் அறை, 24 மணி நேர அறை சேவை, வை-பை சேவை, வாகனங்கள் தரிப்பிடம், சோனா, ஸ்டிம் பாத்,  லைவ் மியூசிக், நகை கடை, நீச்சல் தடாகம், சிறுவர் நீச்சல் தடாகம், சிறுவர் உணவுகள்,  உடற் பயிற்சி நிலையம் மற்றும் கடல் குளியல் உள்ளிட்ட பல வசதிகள் விருந்தினர்களுக்கு தேவையான வகையில் இந்த ஹோட்டலில் உள்ளன.

இதேவேளை, சுமார் 109 அறைகளை கொண்ட இந்த ஹோட்டலில் ஸ்டேன்டட், கபானாஸ், குடும்ப அறை, டியூலக்ஸ் மற்றும் லக்ஸரி சூட் ஆகிய வகையான விடுதி அறைகள் உள்ளன.

இதில் தனி ஒருவர், இருவர், மூவர் என தங்க கூடிய வகையில் அமைய பெற்ற 61 ஸ்டேன்ரட் அறைகளை கொண்டுள்ளது. இருவர் மாத்திரம் தங்கக்கூடிய வகையில் கபானாஸ் எனும் 30 அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த கபானாஸ் எனப்படும் அறைகள் புதிய தம்பதியினரின் தேன் நிலவினை கழிப்பதற்கு ஏற்ற வகையிலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதற்கு மேலதிகமாக நான்கு பேர் தங்கக்கூடிய மூன்று அறைகள் உள்ளன. இரண்டு பேர் தங்கக்கூடிய வகையிலான டியூலக்ஸ் எனும் 14 அறைகள் உள்ளன.  அத்துடன் மூன்று பேர் தங்கக்கூடிய லக்ஸரி சூட் எனும் ஓர் அறை உள்ளது. ஹோட்டலிலுள்ள ஏனைய அறைகளை விட நவீன முறையில் பல முக்கிய வசதிகளுடன் லக்ஸரி சூட் அறை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வானொலி, எல்.சீ.டி. தொலைக்காட்சி, பாதுகாப்பு பெட்டி, ஒரு நாளைக்கு இரண்டு நேர துப்புரவாக்கல் சேவை, சோபா மெத்தை, வேண்டுகோள் விடுத்தால் தினசரி பத்திரிகை உள்ளிட்ட பல வசதிகளை அறைகளில் தங்கும் விருந்தினர்களுக்கு ஏற்ற வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றிற்கு மேலதிகமாக டென்னிஸ், பட்மின்டன், மேசைப்பந்து, வலைப்பந்து, கரம், ஜிம் ஆகிய விளையாட்டு வசதிகளும் இந்த ஹோட்டலில் உள்ளன. அத்துடன் கடலை அண்டிய பிரதேசத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கின்றமையினால் கடல் சார்ந்த பெயர்களான த யாட், வேவ்ஸ், ஷெல்ஸ், கோறல்ஸ், ஹோரல்ஸ் மற்றும் சாண்ட்ஸ் ஆகிய பெயர்களில் உணவு விடுதிகள் அமையப்பெற்றுள்ளன.

விருந்தினருக்கு தேவையான அனைத்து வகையான உணவுகளையும் 24 மணித்தியாலங்களும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஹோட்டலில் பிரதான மூன்று உணவகங்கள் மூன்று திசைகளில் காணப்படுகின்றன. இதன் காரணமாக விருந்தினர்கள் விரும்புகின்ற உணவுகளை விரும்பிய இடத்தில் தெரிவு செய்ய முடியும்.

சுமார் 350 பேர் இருக்கும் அளவிற்கு திருமண உள்ளிட்ட பொது நிகழ்வுகளை நடத்துவதற்காக பன்குயிற்றும் உள்ளது. அத்துடன் ஒரு சமயத்தில் இரண்டு திருமண நிகழ்வுகளையும் நடத்த கூடிய வகையிலான வசதிகளையும் இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.

அத்துடன் கூமார் 20 பேர் கலந்துகொள்ள கூடிய வகையிலான சிறிய மாநாட்டு மண்டபமும் உள்ளது. விருத்தினர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் இந்த அறையில் மாற்றியமைக்கப்படும். அத்துடன், விருந்தினர்களிற்கு ஏற்ற வகையில் விசேட வகையான நாட் பொதிகளையும் 'த சான்ட்ஸ்' ஹோட்டல் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது காலை உணவுடன் நீச்சல் தடாக வசதி, இரவு நேர தங்குமிடத்துடன் காலை உணவு மற்றும் நீச்சல் தடாக வசதி, புஃல் போர்ட் எனப்படும் காலை மதியம், இரவு ஆகிய நேர உணவுகளுடன் நீச்சல் தடாக வசதி மற்றும் காஃப் போர்ட் எனப்படும் பகல் மற்றும் இரவு உணவுகளுடன் நீச்சல் தடாக வசதி உள்ளிட்ட பல பொதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அனைத்து வகையான பொதிகளும் விருந்தினரின் வசதிக்கு ஏற்ற வகையில் மிக குறைந்த கட்டணத்திலான ஒருநாள் பொதிகளாகும். பொது முகாமையாளரான நிரான் ரத்வத்தையினை தலைமையிலான த சான்ட்ஸ் ஹோட்டலிலுள்ள ஊழியர்கள் - விருத்தினர்களை மிக்க சிறந்த முறையில் வரவேற்கின்றனர்.

வருட இறுதி பருவகாலம் ஆரம்பிக்கும் இத்தருணத்தில் இப்பொழுதே இவ்விடத்தினை நீங்கள் தெரிவுசெய்து கொண்டால் வருட இறுதியினை மகிழ்ச்சியாக கழிக்க முடியும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 0094 0342228484 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் gm.thesands@aitkenspenceஎன்ற மின்னஞ்சல் ஆகியவற்றின் ஊடாக தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.









சனி, 29 செப்டம்பர், 2012


செவ்வாய்க் கிரகத்தில் நீரோடை; தடங்களை அனுப்பியது க்யூசியாசிட்டி



செவ்வாய்க் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளைக் கற்கள் மற்றும் பாறை இருப்பதை நாசாவின் க்யூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா க்யூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது.

அது கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வை ஆரம்பித்த நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் பதிந்த இடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது.

இந்நிலையில், செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்ததற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது நீரோடையால் அடித்துக் கொண்டுவரப்பட்ட சரளைக் கற்களின் பாறைகளை க்யூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது.

அந்த பாறைகளின் அளவு மற்றும் வடிவத்தை வைத்து பார்க்கையில் அவற்றை காற்று கொண்டு வந்து போட்டிருக்க முடியாது. கட்டாயமாக நீரோடை தான் அந்த கற்களை அடித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கியூரியாசிட்டி விஞ்ஞானி ரெபேக்கா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

சில பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன. அப்படி என்றால் அவை நீண்ட தூரம் அடித்து வரப்பட்டிருக்க வேண்டும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் அங்கு ஒரு நீரோடையல்ல மாறாக பல்வேறு காலகட்டத்தில் பல நீரோடைகள் இருந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது. (படங்கள் - நாசா)


Views: 603
By A Web Design

LATEST NEWS HEADLINES

tamil movie news
ராட்டினம் படத்தில் நடித்த சுவாதி, அடுத்து, அப்புக்குட்டி நடித்த, மன்னாரு படத்தில் நடித்தார்.

tamil movie news
மம்முட்டி, பிருத்விரா‌ஜ் நடித்த போக்கி‌ரி ராஜாவை ராஜா போக்கி‌ரி ராஜா என்ற பெய‌ரில் தமிழில் டப் செய்தார்கள்.

tamil movie news
தெலுங்கில் 'கேமரா மேன் கங்கா தோ ராம்பாபு' என்ற படத்தில் பவன்கல்யான் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.

tamil movie news
விருதுகளில் மட்டுமல்ல வசூலிலும் யு.டிவிக்கு 2012 செப்டம்பர் மாதம் நல்வரவு தான்.

tamil movie news
சுந்தர பாண்டியன் படத்தில், சசிகுமார், அப்புக்குட்டி உட்பட மூன்று பேர், லட்சுமி மேனனிடம், "ஐ லவ் யூ சொல்லி துரத்தியதைப் போல், நிஜத்திலும்,

tamil movie news
ஈகா ( நான் ஈ )பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி சமீபத்தில் சமூக அக்கறையோடு சத்தமில்லாமல் ஒரு காரியம் செய்திருக்கிறார்.

tamil movie news
அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சமீபத்தில் அறுவை சிசிக்சைக்காக அமெரிக்கா கொண்டு சென்றனர்.

tamil movie news
பிரபல இந்தி படமான ஜிஸ்ம் 2' என்ற படத்தில் நடித்து பிரபல்யாமான நடிகை சன்னி லியோன்.

tamil movie news
கேரளாவின் பிரபல சினிமா டைரக்டர் பிளஸ்சி. இவர் களிமண் என்ற சினிமா தயாரித்து வருகிறார்.