எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 15 செப்டம்பர், 2012

பனடோல் மூலம் தலவில மற்றும் மடு பிரதேசங்களில் நிவாரணம்
 
By J. Sujeewa Kumar
2012-09-15 16:15:48

கிளாசோ ஸ்மித்கிளைன் (GSK'S) நிறுவனத்தின் வர்த்தக நாமமும், பரசிடமோல் வர்க்கத்தை சேர்ந்த இலங்கையின் நம்பிக்கைக்குரிய வலி நிவாரணியான பனடோல், தலவில மற்றும் மடு திருவிழாக்களில் மருத்துவ மற்றும் முதலுதவி சிகிச்சை முகாம்களை ஏற்படுத்தி பக்தர்களுக்கு உதவிகளை வழங்கியிருந்தது.

இந்த இரு திருவிழாக்களின் போது பரி.ஆன் மற்றும் மடு அன்னையை தரிசிக்க 900,000 க்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இவ்விரு பிரதேசத்திலும் பனடோல் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்களில் பக்தர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ உதவிகள், முதலுதவி சிகிச்சைகள் போன்றன வழங்கப்பட்டன.

இம் முகாம்களில் கட்டில், தெளிப்பான், மருத்துவ உபகரணங்கள், ஆலோசனை பிரிவு, பார்வையாளர் பிரிவு போன்றன மருத்துவ ஆலோசகர்கள் மூலம் வழங்கப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு ஆலோசனை மற்றும் திடீர் மருத்துவ தேவையுள்ளோருக்கு அவசியமான சேவைகளை வழங்கும் பொருட்டு நடமாடும் முதலுதவிக் குழுவினர் மூலம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சேவைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவசர மருத்துவ உதவி தேவையுள்ளவர்களை அருகாமையில் உள்ள வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக