எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 8 மார்ச், 2014

உதயநிதிக்காக சம்பளத்தை குறைத்துக்கொண்ட நயன்தாரா  



கோலிவுட் நடிகைகளில் தற்போது நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பவர் நயன்தாராதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நாயகியும் நயன்தாராவேதான். 



ஒரு படத்திற்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் பேசி கறாராக வாங்கிவிடுவார். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் கஹானி ரீமேக் படமான நீ எங்கே என் அன்பே படத்திற்கும், இது கதிர்வேலன் காதல் படத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் ஜெயம் ரவி படத்திற்கும், உதயநிதியின் நண்பேண்டா படத்திற்கும் அதே தொகைதான் வாங்கியுள்ளார். இந்நிலையில் நண்பேண்டா படத்தின் தயாரிப்பாளர் உதயநிதியிடம் சமீபத்தில் தொடர்பு கொண்ட நயன்தாரா, இந்த படத்திற்கு தன்னுடைய சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அவராகவே முன்வந்து கூறியிருக்கின்றாராம்.

இது கதிர்வேலன் காதல் படம் வசூல்ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுக்காததால், நயன்தாரா, இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. நயன்தாராவே முன்வந்து சம்பளத்தை குறைத்ததை பார்த்து கோலிவுட்டில் பலரும் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக