எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 29 மார்ச், 2014





நயனுக்கு தடை...!


தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனக்கென தனி இடத்தை கொண்டுள்ளவர் நயன்தாரா. சிம்பு, பிரபு தேவாவுடனான சர்ச்சையில் சிக்கி, இனிமேல் யாரையும் காதலிப்பது இல்லை என்ற உறுதியான முடிவோடு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் இறால் மீதான அவரது அளப்பரியா காதலில் ஊர் விரிசல் விழுந்துள்ளது, நயன்தாரா சாப்பிடும் உணவு வகைகளில் முதல் இடத்தில் இருப்பது இறால் மீன் குழம்பு. தினமும் உணவோடு இது இருக்க வேண்டும்.

வெளியூர் படப் பிடிப்புக்கு போனாலும் நயன்தாராவின் ஆசையை அறிந்து ஓட்டல்களில் தேடி அலைந்து இறால் குழம்பை படக்குழுவினர் வாங்கி வைத்து விடுவார்கள். அளவுக்கு அதிகமாக இறால் குழம்பை சாப்பிட்டதால் நயன்தாராவின் சருமத்தில் மாற்றம் ஏற்பட்டது.

தோல் பள பளப்பை இழந்து வரட்சியாக காணப்பட்டுள்ளது, எனவே இதுகுறித்து டாக்டர்களிடம் ஆலோசித்த போது இறால் சாப்பிடுவதை நிறுத்துங்கள் என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

இதனால் தனக்கு பிடித்த இறாலை சாப்பிட முடியாததால் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார் நயன்தாரா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக