எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 21 மார்ச், 2014

Katayai heater, essential oil than the hatch



கார்ன் ஃப்ளேக்ஸ் மிக்ஸர்   என்னென்ன தேவை? 


கார்ன் ஃப்ளேக்ஸ் - 4 கப்,
வேர்க்கடலை - 1/4 கப்,
முந்திரிப் பருப்பு - 1/4 கப்,
திராட்சை - 1/4 கப்,
கறிவேப்பிலை - சிறிது,
சர்க்கரை (விரும்பினால்) - 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள், உப்பு - தேவைக்கேற்ப,
பொரிப்பதற்கு- எண்ணெய்.

எப்படிச் செய்வது?  

கடாயை சூடாக்கி, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும், முதலில் கார்ன் ஃப்ளேக்ஸை கொஞ்ச கொஞ்சமாகப் போட்டு பொரித்தெடுத்துபேப்பர் மேல் வைத்துக் கொள்ளவும். பிறகு, முந்திரி, திராட்சை, கறிவேப்பிலை, வேர்க்கடலை என்று கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து எண்ணெய் வடிந்ததும் சூடாக இருக்கும் போதே அதன் மேல் உப்பு, மிளகாய் தூள், சர்க்கரை கலந்து ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.

இந்த மிக்ஸரை சில நிமிடங்களில் தயாரிக்க முடியும். பரிமாறும்போது தட்டு நிறைந்து இருக்கும்.வெறும் கடாயில் கார்ன்ஃப்ளேக்ஸை வறுத்து உடனே கலந்து பரிமாறவும்.

                            


  ஆரஞ்சு பழத்தின் ரகசியம்

உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டுவந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.
எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச்சாறின் மருத்துவக் குணங்களையும்,  அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.
சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.
இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது.
மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருக்கமடைகிறது. தலைமுடியை நரைக்கச் செய்கிறது. இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.
ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்
வுடன் இருக்கச் செய்கிறது.
இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது.
இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் c-யும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.
பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்து ஆரஞ்சில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.
ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும். நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும். ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது. என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.      
மங்களூர் போண்டா
        Mix everything together except the oil in the oil porittetukka do it and do it at Gooseberry.



என்னென்ன தேவை?

தயிர் - 1 கப்,
மைதா - 2 கப்,
உப்பு - தேவையான அளவு,
ரவை - 1/4 கப் (வறுத்தது),
சோடா உப்பு - சிறிதளவு,
இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக அரிந்தது),
பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன் (சின்னதாக நறுக்கியது),
எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து நெல்லிக்காய் அளவில் கிள்ளிக் கிள்ளி எண்ணெயில் பொரித்தெடுக்க வும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

      மசாலா வேர்க்கடலை

    Keep dry groundnut dip filter. Mix all other ingredients and then soaked


      என்னென்ன தேவை?
      வேர்க்கடலை -100 கிராம்,
தக்காளி - 50 கிராம்,
அரிசி மாவு - 10 கிராம்,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
அம்சூர் தூள் (உலர்ந்த மாங்காய் தூள்) அல்லது எலுமிச்சைச்சாறு - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
காய்ந்த வேர்க்கடலையை நனைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு மற்ற அனைத்துப் பொருட்களையும் கலந்து,  நனைத்த வேர்க்கடலையுடன் பிரட்டி மைக்ரோ வேவ் அவனில் பரப்பி ஒரு நிமிடம் வைக்கவும். பிறகு பிரித்து வைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் மறுபடியும் 2  முதல் 3 நிமிடங்கள் வைக்கவும். கரகரப்பாக வறுபட்டதும், ஆறவைத்து ஒரு டப்பாவில் நிரப்பி வைக்கவும்

வெள்ளை கொண்டைக்கடலை வறுவல்

        Soak chickpeas for 8 hours. Drain and put it in a white cloth and leave to dry for a short time under the fan.


என்னென்ன தேவை? 

கொண்டைக்கடலை - 250 கிராம்,
எண்ணெய் தேவையான அளவு.

வெறும் கடாயில் வறுப்பதற்கு...

வறுத்த மசாலா தூள்,
மிளகு, சீரகம், உப்பு, தனியா, காய்ந்த மிளகாய் தூள்,
தனித் தனியாக வறுத்து பொடித்தது - தலா 2 டீஸ்பூன் அல்லது 1 டீஸ்பூன் (விருப்பத்திற்கு ஏற்ப காரம் சேர்த்துக் கொள்ளலாம்).
எப்படிச் செய்வது?  

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும். அதை வடித்து ஒரு வெள்ளைத் துணியில் வைத்து ஃபேனுக்கு அடியில்  சிறிது நேரம் காய  விடவும். பிறகு ஒரு வாய் அகன்ற கடாயில் எண்ணெயைக் காய வைத்து, கொண்டைக்கடலையை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து, வடித்து ஒரு  பேப்பரின் மேல் போட்டு வைக்கவும். அது சூடாக இருக்கும்போதே டிரை ரோஸ்ட் செய்யவும் (எல்லாவற்றையும் கலக்கவும்). அந்த காரத் தூளை  கொண்டைக்கடலையின் மேல்தூவி, குலுக்கவும். கடலையின் மேல் மசாலா நன்கு ஒட்டிக் கொண்டு ஆறியதும் எடுத்து வைக்கவும்.

கொண்டைக்கடலையை கவனமாக, வெடிக்காதபடி மிதமான தீயில் பொரிக்க வேண்டும். 

மூன்று கலர் காரா பூந்தி

        Chickpea flour in a bowl, mix the rice flour, salt, baking soda, asafoetida, along with water and add to the flour term



என்னென்ன தேவை? 

கடலை மாவு - 2 கப்,
பச்சரிசி மாவு - 6 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு,
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை,
தரமான ஃபுட் கலர் 3 (எல்லா பெரிய கடைகளில் கிடைக்கும்).
முந்திரிப் பருப்பு - தேவைக்கேற்ப,
வேர்க்கடலை - விரும்பினால் தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
பெருங்காயம் - சிறிது,
காஷ்மீரி மிளகாய் தூள் - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?  

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவைக் கலந்து, உப்பு, பேக்கிங் சோடா, பெருங்காயம், தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக்  கலக்கவும். இதை மூன்று பாகமாக வேறு வேறு பாத்திரத்தில் பிரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்தில் பச்சை கலர் சேர்த்து, ஒரு பாகத்தில்  காஷ்மீரி மிளகாய் சேர்த்து, ஒரு பாகத்தில் ஆரஞ்சு கலர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, எண்ணெயின்  மேல் காரா பூந்தி துளையிடப்பட்ட கரண்டியைக் கொண்டு ஒரு குழிக்கரண்டி முதல் பாகத்தை ஊற்றி தட்டிக் கொண்டே இருந்தால் பூந்திகள் விழுந்து  விடும். எண்ணெய் ஒலி குறையும் வரை வறுக்கவும்.

இப்படி முதல் பாகத்தை முடித்து விட்டு இரண்டாவது கலர் பாகத்தையும் மூன்றாவது கலர் பாகத்தையும் பொரித்து வடிக்கவும். ஒரு டிஸ்யூ பேப்பரின்  மேல் பொரித்தவற்றை வைத்து ஆறவிடவும். ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சூடாக இருக்கும்போதே சிறிது மிளகாய் தூள் சேர்த்துக்  கலந்து எண்ணெயில் வறுத்த முந்திரி, வேர்க்கடலை, கறிவேப்பிலை சேர்த்து, வீட்டில் ஓமப் பொடி இருந்தால் அதையும் சேர்த்துக் கலந்து  பரிமாறவும்.                                                                                                                                      

மெதுவடை

        Dal soaked for 4 hours, as the ball skimmed the ground without even a drop of water, salt, green chillies Grind.


என்னென்ன தேவை?

முழு உளுத்தம் பருப்பு - 2 கப்,
உப்பு, பச்சை மிளகாய் - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.
எப்படிச் செய்வது?

உளுந்தை 4 மணி நேரம் ஊறவைத்து, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் வெண்ணைப் பந்து போல் அரைத்து, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து  அரைக்கவும். கறிவேப்பிலை தூவி வடைகளாகப் பொரித்தெடுக்கவும். மாவைப் புளிக்கவிடாமல் உடனே எண் ணெயில் பொரித்தெடுத்தால் மேலே  மொறுமொறுவென்றும், உள்ளே மெத்தென்றும் இருக்கும். எண்ணெய் குடிக்காத வடை ரெடி

வடை கறி

       Katalaipparuppai Soak 4 hours, pouring a little water to solid ground is a little karakarap.


என்னென்ன தேவை?

கடலைப்பருப்பு - 1/4 கிலோ,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 6 பல்,
பட்டை - 2,
சோம்பு - 2 டீஸ்பூன்,
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கியது),
கொத்தமல்லி - 1/2 கட்டு (பொடியாக நறுக்கியது),
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
கடலைப்பருப்பை 4 மணி நேரம் ஊற வைத்து, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கெட்டியாக சிறிது கரகரப்பாக அரைக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பட்டை,  சோம்பு விழுதாக அரைக்க வேண்டும். மேற்கண்ட எல்லா சாமான்களையும் அரைத்த கடலைப் பருப்புடன் சேர்த்து கலந்து வைத்து, தேவையான  போது சிறிய சிறிய வட்டங்களாகத் தட்டி பொரித்து (நல்ல பொன்னிறமாக), தயாரான தக்காளி கறியுடன் (அடுத்த பக்கத்தில் செய்முறை உள்ளது)  கலக்க வேண்டும்.                                                                                                                                                                

சீரகத்தின் தாரக மந்திரம்

சீரக‌ம் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரி‌யு‌ம், ஆனால் அதனை எ‌ந்த ‌விடய‌த்‌தி‌ற்கு எ‌வ்வாறு பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் தெ‌ரிவ‌தி‌ல்லை.
வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் கடா‌யி‌ல் ‌சீரக‌த்தை‌ப் போ‌ட்டு வறு‌த்து அ‌தி‌ல் தண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த கஷாய‌த்தை‌க் கொடு‌க்க வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை பழ‌ச்சாறுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.                                                                                                       


   
சுவையுடன் சுகம் தரும் பிளம்ஸ்!

நமது நாட்டில் மலைப்பகுதிகளில் அதிகம் விளையும் பழங்களில் ஓன்று பிளம்ஸ்.
நல்ல சிவப்பாகவும், கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் இருக்கும் இந்த பழம் இனிப்பு, புளிப்பு என இரண்டும் கலந்த சுவையுடன் இருக்கும்.
மனிதனின் செயல்பாட்டிற்கு இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நிமிடத்திற்கு 72முறை சுருங்கி விரியக்கூடிய இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலுக்கு தேவையான ரத்தத்தை சுத்தப்படுத்தி மற்ற பாகங்களுக்கு அனுப்ப முடியும்.
சில நேரங்களில் இதன் செயல்பாடு அதிகமாகவும் சில நேரங்களில் குறைவாகவும் காணப்படும். கோபம், பயம் போன்ற காரணங்களால் இதயமானது வேகமாக சுருங்கி விரிகிறது. இது இதயகோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது.
இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க பிளம்ஸ் பழங்களை சாப்பிடலாம்.
ரத்தத்தை சுத்தப்படுத்த
ரத்தம் அசுத்தம் அடைவதால் சிறுநீரக நோய்கள், ரத்த அழுத்தம், ரத்தசோகை, உடல் சோர்வு போன்றவை ஏற்படும்.
ரத்த சுத்தத்திற்கு பிளம்ஸ் பழங்களை சுவைக்கலாம். பிளம்ஸ் பழத்தின் சதைகளை எடுத்து நிழலில் உலர்த்தி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
ஜீரண சக்கியைத் தூண்ட
உடலில் நோய் தாக்குவதற்கு அஜீரணமும் ஒரு காரணம். உண்ட உணவானது நன்கு ஜீரணமானால் தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். தினமும் உணவு உட்கொண்ட பின்னர் பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகள் நீங்கும்.

ஆரோக்கியத்துடன் கூடிய பலம்

இந்த உலகில் மனிதனாக பிறந்தவன் பணம், புகழோடு வாழவிரும்புகிறானோ இல்லையோ நோயற்ற வாழ்வே வாழவிரும்புகிறான்.
அந்தவகையில் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு சத்தான உணவுகளுடன் சேர்த்து உடலுக்கு பலம் தரும் உணவுகளையும் உண்ண வேண்டும்.
இதோ நீங்கள் ஆரோக்கியமான வாழ்வு வாழ்வதற்கான பலமான உணவுகள்,
பேரீச்சம்பழம்
பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும்.
முருங்கை
முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.
அருகம்புல்
அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்துசம அளவு வெண்ணெய் கலந்து காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.
வெந்தயக்கீரை
வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிரங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.
வில்வம்பழம்
வில்வம்பழத்தின் சதை பாகத்தை எடுத்து அத்துடன் சீனி கற்கண்டை சேர்த்து கலந்து ஒரு கோலி உருண்டை அளவு காலை மட்டும் என இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலுபெறும்.. வில்வப்பழத்தை சாப்பிடும் காலத்தில் புளி காரம் சேர்க்க கூடாது.
வேப்பம்பூ
வேப்பம்பூ , நிலவேம்பு ஒரு அவின்ஸ், எடுத்து இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்துவிட்டு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர பலகீனங்களும் காய்ச்சலுக்கு பின் உண்டாகும் பலகீனங்களும் சரியாகிவிடும்.
அரிசி
அரிசி தவிட்டுடன் பனை வெல்லத்தை கலந்து சிறு உருண்டை செய்து வாயில் போட்டு சாப்பிட்டால் உடல் நல்ல பலன் பெறும்.
கல்யாண பூசணி
கல்யாணபூசணி சாறு 1 டம்ளர் எடுத்து அதில் பனை வெல்லத்தைப் போட்டுக் கலக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் உடம்பில் ஏற்படும் தளர்ச்சி களைப்பு, மூளைச்சோர்வு அத்தனையும் சரியாகிவிடும்.
உடல் மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால் வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும்.
நீண்ட நாள் வியாதியில் படுவோருக்கு ஆரஞ்சுபழ ரசமும் ஆரஞ்சுதோல் சேர்த்து நீரும் தக்காளிபழ ரசமும் முன்றும் சமமாக கலந்து குடித்தால் அதீக சீக்கிரத்தில் ரத்தம் அபிவிருத்தி அடைகிறது. நல்ல பலத்தையும் சுறுசுறுப்பையும் பெறலாம்.



Photo 1 of 6

வியாழன், 20 மார்ச், 2014


ஆறே கிழமைகளில் 9000 டொலரை மாத்திரம் செலவு செய்து பிரமாண்டமான வீடொன்றை நபரொருவர் நிர்மாணித்துள்ளார்.

தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்வீடானது வழமையாக நாம் காணும் வீட்டின் தோற்றத்தை போன்றல்லாது குவிவு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் அரீன் என்பவரே இந்த வீட்டை நிர்மாணித்துள்ளார். இவர் தனது நண்பரான ஹஜார் கிப்ரன் என்பவரின் வீட்டிற்கு சென்றபோதே தனது கனவு இல்லம் பற்றி சிந்தித்துள்ளார். பின்னர் அதனை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வீடானது சீமெந்தாலும் செங்கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டின் அடிப்படை அலகுகளுக்கு மாத்திரம் 6000 டொலரை இவர் செலவிட்டுள்ளார். வீட்டை அழகு படுத்துவதற்கான தளபாட வசதிகள் உள்ளடங்கிய ஏனைய விடயங்களுக்கு 3000 டொலர் உள்ளடங்களாக மொத்தமாக 9000 ஆயிரம் ரூபாவை அவர் செலவு செய்துள்ளார்.


புதன், 19 மார்ச், 2014



தமிழ் மக்களுக்கு புதுசா ஏதாவது ஒண்ணு பண்ணனும், அவங்க காட்டுற அன்புக்கு நான் ஏதாவது செய்யணும்னு நினைச்சு பண்ணதுதான் இந்த கோச்சடையான், என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெராப், ஆதி, ஷோபனா, ருக்மணி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் படம் 'கோச்சடையான்'. ஏ ஆர் ரஹ்மான் இசையில், வாலி, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி, சவுந்தர்யாவின் இயக்கத்தை மேற்பார்வையும் செய்துள்ளார். முரளி மனோகர் தயாரிக்க, ஈராஸ் நிறுவனம் இப்படத்தினை வெளியிடுகிறது. இந்தியாவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் கோச்சடையான்தான்.

இந்தப் படத்தின் இசை வெளியீடு விழா சென்னையில் சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது. இந்த விழாவைப் பார்க்கவும், வெளியில் ரஜினியைப் பார்க்கவும் திரண்டிருந்த கூட்டம் வரலாறு காணாதது என்றால் மிகையல்ல. சத்யம் அரங்குக்கு பக்கத்திலிருந்த கட்டிடங்களிலெல்லாம் ஏறி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஷாரூக்கான், கே.பாலசந்தர், ஷங்கர், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். கோச்சடையான் படத்தின் இசையை சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

இது கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா அல்ல. இப்படம் உருவாவதற்கு யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லும் விழா. இப்போ நான் நிறைய பேசுறத விட, இந்த படத்தோட வெற்றி விழாவில் நான் நிறையப் பேசப்போகிறேன். முதல்ல இந்த படம் இப்படி உருவாகும் என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று.

எனக்கு எப்பவுமே ராஜா ராணி கதை என்றாலே ரொம்ப இஷ்டம். ரொம்ப பிடிக்கும். 150 படங்கள் நான் பண்ணியிருந்தால்கூட, ஒரு ராஜா ராணி கதை நான் பண்ணவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்துக்கிட்டே இருந்தது. இனிமேல் எனக்கு பணமோ, புகழோ தேவையில்லை. எனக்கு ஆண்டவன் புண்ணியத்தில் எல்லாமே நீங்க கொடுத்திருக்கீங்க.

இதுவரைக்கும் தமிழ் சினிமால ஏன் இந்தியாவில் கூட யாருமே பண்ணாத ஒரு ராஜா ராணி படம் செய்யணும்னு முடிவு பண்ணித்தான் ராணா படம் தொடங்கினேன். அந்தப் படத்தோட கதையை நான் 20 வருஷமா மனசுக்குள்ள வச்சிருந்தேன். அந்தப் படம் தொடங்கின நேரத்துல எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அதற்கு பிறகு என்னாச்சு அப்படிங்குறது உங்களுக்கே தெரியும்.

ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பினாலும், ராணா கதைக்கு நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டுச்சு. அப்போதைக்கு அது முடியாம போச்சு. ஒரு நாள் முரளி மனோகர் எனக்கு போன் பண்ணி ராணாவுக்கு மேலே கே.எஸ்.ரவிகுமார் கோச்சடையான் அப்படினு ஒரு கதை பண்ணியிருக்கார். கேட்டுப் பாருங்கனு சொன்னாங்க. இப்போ பண்ண முடியாதே, 2 வருஷமாவது ஆகுமே அப்படினு சொன்னேன். இல்ல. நீங்க முதல்ல கேளுங்க. அதை எப்படி பண்ணலாம்னு அப்புறம் பார்க்கலாம்னு சொன்னாங்க. சரி கேட்கிறேனு கேட்டேன்.

ராணாவே எனக்கு ரொம்ப பிடிச்ச கதை. ராணாவை விட எனக்கு கோச்சடையான் கதை ரொம்ப பிடிச்சது. நல்லாயிருக்கு ஆனா இதை இப்போ எப்படி பண்றதுனு கேட்டேன். நீங்க சரினு சொன்னீங்கன்னா ஒரு ஐடியா இருக்கு. சுல்தான்னு ஒரு படம் ஏற்கனவே சௌந்தர்யா பண்ணியிருக்காங்க. அதனால இந்த கதையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துல பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தி தெரியாது. எனக்கு நம்பிக்கை வேற இல்லை.

தமிழ் மக்களுக்கு புதுசா ஏதாவது ஒண்ணு பண்ணனும், அவங்க காட்டுற அன்புக்கு நான் ஏதாவது செய்யணும், ரொம்ப பெருசா பண்ணனும் முடிவு பண்ணினேன். இந்தப் படத்தைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட பல பேர்கிட்ட கேட்டேன், பேசினேன். இந்தப் படம் பண்றதுக்கு 5, 6 வருஷமாகும். 700 கோடியாகுமேனு சொன்னாங்க. இல்ல. அவ்வளவு செலவு எல்லாம் ஆகாது. நம்மோட பட்ஜெட்லயே பண்ண முடியும்னு சொன்னாங்க.

உடனே சவுந்தர்யாகிட்ட பேசினேன். என்னம்மா... பெரிய பொறுப்பு இருக்குமே. பண்ண முடியுமானு கேட்டேன். நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க. இந்த படம் இந்தளவிற்கு வந்ததிற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கம்தான். இந்தப் படத்துக்கு பட்ட கஷ்டத்தை வாயால எல்லாம் சொல்ல முடியாது.

இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருக்குன்னா அதற்கு உழைச்சவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நான் படம் பாத்துட்டேன். இப்போ 3டி பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு.

இதைவிட பெரிசாக இசை வெளியீட்டு விழாவை நடத்தத்தான் முடிவு செய்திருந்தார்கள். நான்தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். படத்தின் வெற்றிவிழாவை மிகப் பெரிய அளவில், எஸ்.பி.முத்துராமன் சார் கேட்டுக் கொண்ட மாதிரி நடத்தலாம்.

சவுந்தர்யா, ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப அவங்க படம் இயக்குறாங்க அப்படின்னா அதற்கு தனுஷ், அஸ்வின் மற்றும் அவங்களோட குடும்பத்தினர் தான் காரணம். அவங்களோட குழந்தையா நினைச்சு, அவங்களை ஊக்குவிக்கிறாங்க. அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்.
இன்னும் ஐஸ்வர்யா, சவுந்தர்யா நிறைய படங்கள் பண்ணனும். அதே நேரத்தில், குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பது எனது கருத்து. குழந்தைகளுக்கு 10, 12 வயசு ஆகுற வரைக்கும் நல்லா பாத்து வளர்த்துட்டு, அதற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த படம் வந்த பிறகு நிறைய பேர் இயக்கச் சொல்லி சவுந்தர்யாவைக் கேட்பாங்க. 2 குழந்தைகளை பெற்றுக்கொடுத்துட்டு அதற்கு பிறகு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க அப்படின்னு நான் சொல்லியிக்கிறேன் என்றார்.




நடிகர்               : ஜெயம் ரவி
நடிகை             : அமலாபால்
இயக்குனர்     : சணித்திரகனி
இசை                : ஜீ.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு    : சுகுமார்

நாசர் நடத்தும் ஆசிரமம் ஒன்றில் தங்கி படித்து வரும் ஜெயம் ரவி, படிப்பு முடிந்து தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். சட்டம், ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்று மனசுக்குள் பொங்கி எழும் ஜெயம் ரவி ஒருநாள், சிக்னலில் டிராபிக் பொலிஸிடம் மாட்டிக் கொள்கிறார். எல்லா பேப்பர்களும் சரியாக இருந்தும் பைன் கட்டச் சொல்கிறார் டிராபிக் பொலிஸ். இல்லையென்றால் 100 ரூபாய் இலஞ்சமாக கேட்கிறார்.

ஆனால், இலஞ்சம் கொடுக்க ஜெயம் ரவி மறுக்கிறார். அதனால், நீதிமன்றம் வரை செல்ல வேண்டியதாகிறது. அங்கு நீதிமன்றத்தில் தன்னிடம் இலஞ்சம் கேட்ட எல்லோரையும் மாட்டிவிடுகிறார். இதனால், அந்த அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட அதிகாரிகள் ஜெயம் ரவியை அடித்து துவம்சம் செய்கிறார்கள்.

ஆனால், அசராத ஜெயம் ரவி ஊழல் அதிகாரிகளை மாட்டிவிட புது திட்டம் தீட்டுகிறார். அதாவது, இல்லாத ஒரு ஆளுக்காக அரசு அடையாள அட்டைகளையும், சான்றிதழ்களையும் நல்ல அதிகாரிகளின் துணையோடு பெறுகிறார். இதற்காக இலஞ்சம் கொடுத்ததை வீடியோவும் எடுத்துவிடுகிறார்.

இந்த வீடியோ ஆதாரத்தை கோபிநாத் உதவியுடன் டிவி சேனலில் ஒளிபரப்புகிறார். இதில், டாக்டர், நீதிபதி, பொலிஸ், எம்.பி. என 147பேர் சிக்குகிறார்கள். அனைவரையும் மக்கள் ணின்னாலும், சட்டத்தின் முன்னாலும் நிறுத்துகிறார் ஜெயம் ரவி. இதனால், கொதிப்படைந்த அதிகாரிகள் ஜெயம் ரவியை பழிவாங்க ணிடிவெடுக்கின்றனர். இறுதியில் ஜெயம் ரவியை அவர்கள் பழிவாங்கினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இலஞ்சத்துக்கு எதிராக தமிழில் வெளிவந்த இந்தியன், சாணிராய், சிட்டிசன், அந்நியன் ஆகிய திரைப்படங்களில் வரிசையில் நிமிர்ந்து நில் படமும் நிற்கிறது. ஜெயம் ரவி ரொம்பவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இப்படத்தில் இரண்டு வேடங்களில் வரும் இவர், இரண்டிலும் நல்ல வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். நரசிம்ம ரெட்டியின் பாடி லாங்குவேஜில் அசத்தியிருக்கிறார்.

அமலாபாலுக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே. ஹீரோவை காதலிக்கவும், டூயட் பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். இவர் இல்லாவிட்டாலும் படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாதது போன்றே இருக்கிறது. கருப்புத் தங்கம் என்ற பட்டப்பெயரோடு அறிணிகமாகும் சூரி காமெடியில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.
சரத்குமார், கோபிநாத் ஆகியோர் திரைப்படத்தில் சிறிது நேரமே வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை, பிற்பாதியில் ஏனோ ஆமை வேகத்தில் நகர்கிறது.

தனி மனிதன் திருந்தினால் தான் நாடு திருந்தும் என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் சணித்திரகனி. இதில், கொலை, ரத்தம் எதுவும் காட்டாமல் இருந்தது கொஞ்சம் நிம்மதியை தருகிறது.

சணித்திரக்கனியின் முந்தைய படமான நாடோடி படத்தை ஒப்பிடும்போது, இது கொஞ்சம் சறுக்கல்தான். ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கிறார் சுகுமார் ஜீவன் ஆகியோரின் ஒளிப்பதிவு கஷக்கல். மொத்தத்தில் நிமிர்ந்து நில் துணிந்து செல்லும். (மாலைமலர்)
                                                 

ராஜாவின் சங்கீத திருநாள் இசை நிழ்ச்சி

2 of 28
Cine Vila Raajavin Sangeetha Thirunaal Music Show Stills
நிகழ்ச்சியை காண அலை கடலாய் திரண்ட மக்கள் கூட்டம்.
2 of 28
                                                                                                                                                                                                                              

திங்கள், 17 மார்ச், 2014

Aarakshan bollywood movie photos (1)

Kadhal Solla Aasai Movie Stills - Image 1 of 18

வானில் பறந்த பாம்புகள் விஞ்ஞானிகளால் அவதானிப்பு

அமெரிக்காவிலுள்ள வேர்ஜினியா வன பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் பறக்கும் பாம்புகள் சிலவற்றை தமது ஆராய்ச்சியின்போது அவதானித்துள்ளனர்.

ஆசிய மழைக் காட்டுப் பகுதியில் பாம்புகள் உடலை விரித்து தட்டையாக்கி பறப்பதை தாம் கண்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தனது உடலை வடிவாக்கி 100அடி உயரமான மரங்களிலிருந்து அவை வானில் மிதந்தன. பார்ப்பதற்கு அவை வானில் நீந்துவது போல தெரிந்தது' என கலாநிதி ஜேக் செர்ச்சா கூறியுள்ளார்.

'விமானம் ஒன்றின் வடிவம் விமானத்தை உயர்த்தும் விசையை வழங்குவது போலவே பாம்புகள் தமது உடல் வடிவத்தை மாற்றியமைத்து காற்றில் மிதக்கின்றன' என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

சனி, 15 மார்ச், 2014

Anjaan Tamil Movie Stills

ஜில்லா

  • நடிகர் : விஜய், மோகன் லால்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :நேசன்
  
Bookmark and Share




தயாரிப்பாளர் சூப்பர் குட் ஆர்.பி. சௌத்ரியின் 25 ஆண்டு கால திரைப்பட தயாரிப்புபணியில் 85வதாக தயாராகி வெளிவந்திருக்கும் திரைப்படம், காவலன், நண்பன், துப்பாக்கி ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து தலைவா தோல்விக்குப்பின் வெளிவந்திருக்கும் விஜய்யின் 56வது திரைப்படம், புதியவர் ஆர்.டி. நேசனின் இயக்கத்தில் முதல் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் பொங்கல் திருநாளை முன்னிட்டு சில நாட்கள் முன்னதாகவே திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் ஜில்லா!

சிவன் எனும் மோகன்லாலின் வளர்ப்பு மகன் சக்தி எனும் விஜய். மதுரையையே ஆட்டிப்படைக்கும் தாதா சிவனுக்காக போலீசிடம் போராடி சக்தி விஜய்யின் கண் எதிரேயே உயிரை விடுகிறார் அவரது அப்பா. அப்பாவை பறிகொடுத்தாலும் அந்த ஸ்பாட்டிலேயே லாலின் நிறைமாத கர்ப்பவதி மனைவி பூர்ணிமா பாக்யராஜையும், அவர் பிரசவிக்கும் குழந்தையையும் வில்லன்களிடமிருந்து காபந்து செய்கிறார் சிறுவயது விஜய்! அப்புறம்? அப்புறமென்ன...? அப்பாவை இழந்ததால் அநாதையாகும் விஜய், லாலின் மூத்த மகனாக வளர்ந்து ஆளாகி, லால் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிறார். தன்வசம் எத்தனையோ ஆட்கள் இருந்தும் முக்கிய தாதாபணிகளுக்கு ஒற்றை ஆளாக சக்தி - விஜய்யை அனுப்பி காரியம் பல சாதிக்கிறார் சிவன் - லால்!

தன் தந்தையை சிறுவயதில் போலீஸ்காரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றதால் காக்கி உடுப்பைக் கண்டாலே வெறுக்கும் விஜய், எதிர்பாராமல் காக்கி உடுப்புக்கு சொந்தக்காரரான காஜல் அகர்வாலை உடுப்பு (காக்கி உடுப்பு) இல்லாத நேரத்தில் காதலிக்க தொடங்குகிறார். அவர் போலீஸ் என தெரிந்ததும் காக்கி உடுப்பின் மீது இருக்கும் வெறுப்பில் காதலையே தூக்கி எறிகிறார். அப்படிப்பட்ட விஜய்யே ஒரு கட்டத்தில் அப்பா மோகன் லாலின் விருப்பம் மற்றும் மதுரையை ஏப்பம் விடும் முயற்சிக்காக காக்கி உடுப்பை மாட்டிக்கொண்டு போலீஸாக பணிபுரிய வேண்டிய சூழல்! தாதா போலீசாகும் விஜய் மேலும் ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பா மோகன் லாலுக்கு எதிராகவே திரும்புகிறார். காஜலுடன் மீண்டும் காதலில் விழுகிறார். அதுமட்டுமன்றி அப்பா சிவனை நல்லவராக்கும் முயற்சியில் நல்ல போலீசாகும் சக்தி - விஜய், சிவன் - லாலின் கோபப்பார்வைக்கு ஆளாக அதை சாதகமாக்கிக் கொள்ளும் சிவனின் அடிவருடி அமைச்சர் சம்பத், தன் வஞ்சத்திற்கு அப்பா மகன் இருவரையும் தீர்த்து கட்டும் ஆசையில் இருவரையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். வென்றது சம்பத்தா? விஜய்யா? மோகன் லாலா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் ஜில்லா வின் மீதிக்கதை!

இளைய தளபதி விஜய், தனக்கே உரிய ஸ்டைலில் சக்தியாக சக்தி காட்டியிருக்கிறார். மோகன்லால் - பூர்ணிமா மீதான அப்பா அம்மா பாசத்திலாகட்டும், மகா - நிவேதா, விக்வேஷ் - மகத் மீதான சகோதர பாசத்திலாகட்டும், வில்லன்களை அடித்து நொறுக்கும் அதிரடியிலாகட்டும், காஜல் அகர்வாலுடனான காதலில் ஆகட்டும் அனைத்திலும் ஸோ குட் சக்தி - விஜய்!

விளையாட்டுல மோதுறவனை பார்த்திருப்ப... விளையாட விட்டு மோதுறவனை பார்த்திருக்கியா... என பஞ்ச் வசனம் பேசுவதிலாகட்டும், பரோட்டா சூரியை விட்டு போலீஸ் பரேடில் ஓவர் பெர்பார்மென்ஸ் காட்டும் போலீஸ்காரரைப் பார்த்து, ஆமாம் இவரு பெரிய துரைசிங்கம் என போட்டி நடிகர் சூர்யாவுக்கு சொக் வைப்பதிலாகட்டும், உங்க பக்கம் நின்னு பார்க்கறப்போ நாம பண்றது எல்லாம் ரைட்டா தெரிஞ்சுது, இந்த பக்கம் வந்து பார்க்கறப்போ அதுவே தப்பா தெரியுது... நியாயத்தின் பக்கம் நின்று கொண்டு மோகன்லாலுக்கு எதிராக வசனம் பேசும் போதிலாகட்டும் விஜய்யை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது எனலாம்! வாவ்! இன்னும் நடை, உடை, பாவனைகளில் எத்தனை குறும்பு. ஆனால் அது சில இடங்களில் டூ மச்சாக தெரிவதை விஜய்யும், இயக்குநரும் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

மோகன்லால் கிட்டத்தட்ட விஜய்யின் காவலன் படத்தில் ராஜ்கிரண் ஏற்றிருந்த பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் என்றாலும்.. விஜய் மாதிரியே இந்த சிவன் பக்கத்தில் நின்னு பார்த்திருப்ப.. எதிர்த்து நின்னு பார்க்குறியா.. என்றும், இந்த சிவன் கால் படுற இடம் மட்டுமல்ல, நிழல் படுற இடம் கூட எனக்கே சொந்தமாயிரும் என்றும் அடிக்கிற டயலாக்குகளில் தியேட்டர் அதிர்கிறது. அவர் விஜய்யுடன் போடும் ஆட்டங்களும் சூப்பர்ப்!

காஜல் அகர்வால் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கவர்ச்சி அகர்வால்! அதிலும் டூயட்களில் மனதை கொள்ளையடிக்கிறார். பரோட்டா சூரி காமெடியில் தேறியிருக்கிறார். பூர்ணிமா, மகத், தம்பி ராமையா, சம்பத், சரண், ஆர்.கே. ரவி மரியா, பிரதீப் ராவத், பிளாக் பாண்டி, ஜோ மல்லூரி, நிவேதா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களும் கச்சிதம்.

கணேஷ் ராஜவேலின் ஒளிப்பதிவை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். டி. இமானின் இசையில் பாடல்கள் எட்டு ( கரோக்கி டிராக்குகள் உட்பட) அத்தனையும் குட்டு! ஆர்.டி. நேசனின் எழுத்து, இயக்கத்தில் முன்பாதி சற்றே ஜவ் வாக இழுத்தாலும், பின்பாதி பரபரப்பாக பட்டையை கிளப்பி இருக்கிறது. விஜய் அ.தி.மு.க., பார்டர் போட்ட டி. சர்ட்டுடன் ஒரு பாடலில் ஆடுவது, லாஜிக் இல்லாமல் போலீஸ் ஆவது... உள்ளிட்ட காமெடிகள் இருந்தாலும், ஜில்லா - நல்லாவே இருக்கிறது. ஆனாலும் இயக்குநர் பார்ட் 2 பில்டப்புடன் படத்தை முடித்திருப்பது கொஞ்சம் ஓவர்!
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : அமலா பால்
  • இயக்குனர் :சமுத்திரக்கனி
  
Bookmark and Share


பி.சமுத்திரகனியின் இயக்கத்தில், சமூகபொறுப்புணர்வுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''நிமிர்ந்து நில்''. பொதுவாக இதுமாதிரி சமூகத்திற்கு பாடம் சொல்லும் நற் கருத்துடைய திரைப்படங்கள், போதனையாக, சோதனையாக... போரடிக்கும்! ஆனால் பெரும் சாதனையாக சமுத்திரகனியின் 'நிமிர்ந்து நில்' திரைப்படம், தியேட்டரில் சீட்டு நுனியில் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து, ஆரம்பகாட்சி முதல் இறுதிகாட்சி வரை கண்கொட்டாமல் கை தட்டவைப்பது தான் ஹைலைட்!

கதைப்படி, அரவிந்த் சிவசாமி எனும் ஜெயம் ரவி, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழத்தெரியாமல் சட்டத்திட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் வாழும் ஒரு தனியார் நிறுவன ஊழியர். ஒருநாள் அறை நண்பரும், அலுவலக நண்பருமான சூரி உடன் இல்லாமல் பைக்கில் வேலையாக கிளம்பும் ஜெயரம் ரவி, லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட எல்லா பேப்பர்களும் இருந்தும் டிராபிக் போலீஸ் எதிர்பார்க்கும் காந்தி தாள் தராததால் போலீஸ், கோர்ட், கேஸ் என ஏகத்துக்கும் அலைகழிக்கப்படுகிறார். டிராபிக் கான்ஸ்டபிளில் தொடங்கி புரோக்கர் வைத்து லஞ்சம் வாங்கும் நீதிபதி வரை எல்லோரையும் போட்டு உடைக்கும் அரவிந்த் சிவசாமி அதாங்க, ஜெயம் ரவி, இச்சயமத்தில் தன்னை லஞ்சம் தந்து காபந்து செய்த ஆரூயிர் நண்பர் சூரியையும், அவருக்கு ஐடியா தரும் (ஜெயம் ரவியை ஒரு தலையாக காதலித்த படி) அமலாபாலையும் கூட போட்டுக் கொடுக்க, படம் பார்க்கும் நமக்கே 'பகீர்' என்கிறது.

அப்புறம்? அப்புறமென்ன? ஜெயம் ரவி அதிகார வர்க்கத்தால் சட்டத்திற்கு புறம்பாக செமையாக பந்தாடப்படுகிறார். குற்றுயிரும், கொலை உயிருமாக குப்பையில் கிடக்கும் ரவியை தேடிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து மெல்ல தேற்றுகின்றனர் சூரி, அமலாபால் மற்றும் கோர்ட்டில் ஜெயம் ரவியின் நேர்மை கண்டு ஈர்க்கப்பட்ட வக்கீல் சுப்பு பஞ்சு உள்ளிட்டோர். இவர்களது கனிவாலும், கவனிப்பாலும் விரைந்து தேறும் ரவி, மீண்டும் திமிருகிறார். ஆனால் இந்தமுறை சும்மா சட்டம் பேசிக் கொண்டிருக்காமல், மருத்துவத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை.. என சகலத்துறைகளிலும் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அடையாளம் காட்டும் விதமாக புத்திசாலித்தனமாக களம் இறங்க திட்டமிடுகிறார் ரவி! இதில் நமக்கெதுக்கு வேண்டாத வேலை... என வெகுண்டெழும் அமலாபால், தான் ரவியின் நேர்மைகண்டு ஆறுமாத காலமாக ரவிக்கே தெரியாமல் ரவியை பின்தொடர்ந்து, அவரை காதலிக்கத் தொடங்கியவர் என்பதையும் மறந்து அரவிந்த் சிவசாமி 'அலைஸ்' ஜெயம் ரவியை பிரிகிறார். ஜெயம் ரவி அதுப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சூரி, வக்கீல் சுப்பு பஞ்சு, நேர்மையான ஏட்டு தம்பி ராமைய்யா, உண்மை டிவி. அபாரதீப்பந்தம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மற்றும் நேர்மையான அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உதவியுடன் பல்வேறு துறைகளில் இருக்கும் ஊழல் பேர்வழிகள் 147 பேருக்கு உண்மை டி.வி. கோபிநாத் ஆப்பு வைக்கிறார். அதில் ரவியை அடித்து துவைத்த போலீஸ்காரர்களும் அடக்கம்!

பாதிக்கப்பட்ட 147 பேரும் சேர்ந்து ஒரு குழு அமைத்து 14.7 கோடி கொடுத்து, ஜெயம் ரவி சாயலிலேயே ஆந்திராவில் இருக்கும் மற்றொரு ஜெயம் ரவியை நரசிம்மரெட்டி எனும் பெயருடைய ரவியை அழைத்து வந்து, தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நமத்து போகச் செய்து தங்களது அரசு உத்தியோகத்தையும், சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்ள காய் நகர்த்துகின்றனர். இறுதியில் வென்றது ஆந்திர ஜெயம் ரவியும், அவரது பின்னணியில் இருக்கும் 147 ஊழல் பேர்வழிகளுமா? அல்லது தமிழக ரவியா.? அமலாபாலும் அவரது காதலும் என்னவாயிற்று...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது 'நிமிர்ந்து நில்' படத்தின் மீதிக்கதை!

ஜெயம் ரவி, அரவிந்த் சிவசாமியாகவும், நரசிம்ம ரெட்டியாகவும் இருவேறு பரிமாணங்களில் பொளந்து கட்டியிருக்கிறார். அதிலும் அரவிந்த சிவசாமி ரவி, ஊழல் எதிர்ப்பாளராக அலட்டிக் கொள்ளாமல் நடித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆரம்பகாட்சிகளில் அநியாயங்களை கண்டு அவர் பொங்கும் காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறது. வளைந்து கொடுத்து போகத்தெரியாதவனை வாழத்தெரியாதவன் என சிரிப்பது தானே நம் இயல்பு, அப்படித்தான் சிரிக்கிறோம்... ஆரம்பகாட்சிகளில் ஜெயம் ரவியை பார்த்து, ஆனால் அதன்பின் அவர் எடுக்கு அவதாரங்களும், விஸ்வரூபங்களும் தான் 'நிமிர்ந்து நில்' படத்தில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் விஷயங்கள்! வாவ், ஜெயம் ரவி வாயிலாக இயக்குநர் சமுத்திரகனி தெரிகிறார், என்ன துடிப்பு, என்ன நடிப்பு!

ஆந்திரா, ராஜமுந்திரி - நரசிம்ம ரெட்டியாக வரும் மற்றொரு ஜெயம் ரவியும், அவரது கன்னியர் புடை சூழ்ந்த ஆந்திர இருப்பிடமும் ஒருமாதிரி தெரிந்தாலும், அவரும் ஹீரோ தான் என க்ளைமாக்ஸில் நிரூபிக்கும் இடங்கள் சூப்பர்ப்! ஆனாலும் 'ஆதிபகவன்' ஜெயம் ரவிகளின் மேனரிஸங்கள் இரண்டு ரவிகளிடமும் இந்தப்படத்திலும் இருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்! (ஆனாலும் 'ஆதிபகவன்' தோல்வியையும், 'நிமர்ந்து நில்' வெற்றி ஜெயம் ரவிக்கு ஈடுகட்டிவிடும் என்பது சிறப்பு!)

''உன்னை மாதிரி நேர்மையாக எல்லா சந்தர்ப்பத்திலும் என்னால் வாழமுடியாது... ஆனால், உன்கூட வாழமுடிவு செய்துவிட்டேன்...'' என ஜெயம்ரவியை உருகி உருகி காதலிக்கும் அமலாபால், ஒருகட்டத்தில் அதே நேர்மைக்காக அவரை பிரிவது சினிமாட்டிக்காக இருக்கிறது. ஆனால், அதேநேரம் ரவியுடன், அமலாபால் திரும்ப சேருவது அமலாவின் அப்பாவும், ஊழல் பேர்வழிகளில் ஒருவர் என்பது தெரிந்ததும் வீட்டில் போராடுவது அமலாவின் பாத்திரத்திற்கும், படத்திற்கும் வலு சேர்க்கின்றன!

சூரி, இப்போதெல்லாம் கடிப்பதில்லை... கலாய்க்கிறார், ஜமாய்க்கிறார் என்பது 'நிமிர்ந்து நில்' படத்திற்கும் பலம்! கெஸ்ட் ரோலில் வரும் சரத்குமாரின் நேர்மை, 'இன்ஸ்' இம்சை அனில் மேனன், டாக்டர் நமோ நாராயணன், ஆமாம்மா அய்யாசாமி எம்.பி. ஞானசம்பந்தம், ஜட்ஜ் - சித்ரா லெட்சுமணன், ஏட்டு - தம்பி ராமையா, இன்னொரு நாயகி ராகினி திவேதி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதனால் 'நிமிர்ந்து நில்' படமும் பளிச்சிடுகிறது!

எம்.சுகுமார், எம்.ஜீவன் சகோதரர்களின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் சமுத்திரகனியின் இயக்கத்தில் 'நிமிர்ந்து நில்' படம், பார்க்கும் ரசிகர்களையும் ஜெயம் ரவி மாதிரி லஞ்சம் கொடுப்பதில்லை... வாங்குவதில்லை... என உறுதி ஏற்க செய்வது தான் இப்படத்தின் இமாலய வெற்றி!

''அரசியல்வாதிக்கு ஆயுள் 5 ஆண்டு தான், ஆனா அவங்களுக்கு தப்பா ரூட் போட்டு கொடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு 58 வயசு வரை அதிகாரம்!'' என்பது உள்ளிட்ட இன்னும் பல அனல் பறக்கும் வசனங்களில் நம்மை கவரும் சமுத்திரகனி, சரத்குமாரின் காரை பறக்கவிட்டு டி.வி. லைவ் ரிலே டிரையிலர் லாரியை மோத விடுவதும், ஜெயம் ரவிகளை தேவை இன்றி மோதவிடுவதையும் தவிர்த்திருந்தார் என்றால் 'நிமிர்ந்து நில்' இன்னும் 'தில்'லாக இருந்திருக்கும்! ஆனாலும், ''நிமிர்ந்து நில்'' - ''சமுத்திரகனியின் - தில்'' - ''ரசிகர்களின் நெஞ்சில்!''